Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் ஓடும் ரயிலில் தீ விபத்து.. நள்ளிரவில் அலறிய பயணிகள்.. உடல் கருகி ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: ஆந்திராவில் ஓடும் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளம் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திரா அருகே வந்த போது ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலின் பி1 மற்றும் எம் 2 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த இரு பெட்டிகளும் கழற்றிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஆந்திராவின் எலமஞ்சிலி அருகே சென்ற போது ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

fire-breaks-out-in-tatanagar-ernakulam-express-in-andhra-pradesh-one-killed

நள்ளிரவில் தீ விபத்து

நள்ளிரவு 12.45 மணியளவில் ரயிலின் பி1, எம் 2 ஆகிய இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பெட்டிகளிலும் தலா 82 மற்றும் 76 பயணிகள் பயணித்துள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் திடுக்கிட்டு எழுந்து அபயக்குரல் எழுப்பினர்.

உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ஒருவர் மட்டும் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பி 1 பெட்டியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகரிகள் கூறினர்.

பயணிகள் அவதி

இந்த விபத்து காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா செல்லும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

உடனே கழற்றிவிடப்பட்ட பெட்டிகள்

ரயில் தீ விபத்தில் சிக்கி பலியான பயணியின் அடையாளம் தெரியவந்துள்ளது. சந்திரசேகர் சுந்தரம் அவரது பெயர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து அதிகரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எர்ணாகுளம் நோக்கி ரயில் வந்து கொண்டு இருந்த போது இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.

இரண்டு பெட்டிகளும் உடனே கழற்றிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ பிடித்த இரண்டு பெட்டிகளிலும் பயணித்த பயணிகள் மாற்று ஏற்பாடு மூலம் எர்ணாகுளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ரயில்வே ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது.

ஹெல்ப்லைன் எண்கள்:

எலமஞ்சிலி - 7815909386
அனகப்பள்ளி - 7569305669
துனி - 7815909479
சமல்கோட் - 7382629990
ராஜமுந்திரி - 088 - 32420541, 088 - 32420543
ஏலூர் - 7569305268
விஜயவாடா - 0866 - 2575167

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+