"உடலுறவு".. ஆசை ஆசையாய் காத்திருந்த மணமகன்.. ரூமில் நுழைந்ததுமே கல்யாண பொண்ணு தந்த ஷாக்.. ஒரே ஓட்டம்
முதலிரவு கூட நடக்கவில்லை, அதற்குள் மனைவி கர்ப்பம் என்று புலம்புகிறார் மாப்பிள்ளை
ஹைதராபாத்: முதலிரவிலேயே அதிர்ச்சி தந்த மணமகளால், மாப்பிள்ளை நிலைகுலைந்து விட்டார்.. இப்போது புதுமண தம்பதி இருவருமே மாறி மாறி குற்றச்சாட்டை வீசி, குண்டூரையே அலற வைத்துள்ளனர்.
Recommended Video
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சீனிவாசராவ்.. பி.டெக் படித்துள்ளார்.. மோட்டோ கண்ட்ரோலர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. இவரது அப்பா வருவாய் துறையில் பணியாற்றி ரிடையர் ஆனவர்.. சீனிவாசராவ் ஒரே மகனும்கூட.

செல்ல மகன்
அதனால், தங்களின் ஒரே செல்ல மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்த பெற்றோர் திட்டமிட்டனர்.. அதன்படி, அதே மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்பவரை பெண் பார்த்து பேசி முடித்தனர்.. பிரியாவின் அம்மா, ஸ்ரீலட்சுமி வருவாய் துறை அதிகாரியாக உள்ளார்.. மணமக்களின் விருப்பத்தின்பேரில், இரு குடும்பத்தினரும் திருமணத்தை தடபுடலாக செய்தனர்..

பிரியா
இதில், சீனிவாசராவ் எந்தவிதமான வரதட்சனையும் வாங்காமல் பிரியாவை கல்யாணம் செய்து கொண்டார்... திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை பார்த்து அந்த ஊரே மிரண்டுவிட்டது.. இந்நிலையில், சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.. "கல்யாணத்துக்கு முன்பேயே, அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறாள்.. ரிசப்ஷன் முடிந்த கையோடு, மகளை தங்களுடன் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார் அவரது அம்மா ஸ்ரீலட்சுமி.. எங்களுக்கு முதலிரவுகூட நடக்கவில்லை.. பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து குண்டூரில் எங்களுக்கு வீடு வாடகை பார்த்து குடி வைத்தனர்.

முதலிரவு
அந்த வீட்டில் ஒரே ஒரு நாள் மட்டும் என் மனைவி தங்கினார்.. மறுநாளே, அம்மா வீட்டிற்கு போய் வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விட்டார். எப்படி என் மனைவி கர்ப்பமானார்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.. ஆனால், மணமகள் பிரியா வேறு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "சீனிவாச ராவ் என்னை கடுமையாக தாக்கி வரதட்சணை கொடுமை செய்துவிட்டார்.. 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டார்கள்.. நான் ஏற்கனவே வேறு ஒருவருடன் நிச்சயம் ஆனவள்.. இது என் கணவருக்கும் தெரியும்" என்று புகார் கூறியுள்ளார்.

கர்ப்பம்
இந்த இரு தரப்பு புகார்களையும் கேட்டு போலீஸையே கிறுகிறுத்து போய்விட்டனர்.. கடந்த ஆண்டு ஸ்ரீலட்சுமி விஆர்ஓவாக பணியாற்றியபோது, அதே கிராமத்தில் உள்ள விமானப்படை ஊழியரை, தன்னுடை மகளுக்கு வரனாக பார்த்துள்ளார்.. பிரியாவுக்கு அவருடன் நிச்சயதார்த்தமும் செய்ததாக தெரிகிறது... ஆனால் நிச்சயித்தபடி கல்யாணம் மட்டும் நடைபெறவில்லையாம்.. இந்த விஷயம், திருமணத்துக்கு பிறகுதான் தனக்கு தெரிந்தது என்று சீனிவாசன் புலம்புகிறார்..

முதலிரவு
"எல்லாரும் சேர்ந்து என்னிடம் மறைத்துவிட்டனர்.. வேறு ஒருவருடன் ஏற்கனவே குடும்பம் நடத்தி வந்துள்ளார் அந்த பெண்.. என்னை இப்படி ஏமாற்றிவிட்டார்களே.. இதில் பண மோசடி வேறு சொல்கிறார்கள்.. நான் வரதட்சணையாக 10 பைசாகூட வாங்கவில்லை.. 10 லட்சம் கேட்டேன் என்கிறார்கள்.. அதற்கு ஆதாரம் இருக்கிறதா? அம்மா - மகள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனிவாசன் புலம்புகிறார்.. தற்போது இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிகிறது.. இருந்தாலும், நிச்சயம் மட்டுமே ஆனவர், எப்படி கர்ப்பம் ஆனார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறதாம்.

சுகாசினி
இப்படித்தான் சித்தூரில் 2 நாளைக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. சுகாசினி என்ற பெண், சுனில் என்ற இளைஞரை காதலித்துள்ளார்.. தான் ஆதரவற்றவர் என்று சொல்லி, சுனிலை திருமணம் செய்துள்ளார் சுகாசினி.. மருமகளுக்கு 3 பவுன் நகையும் சுனில் வீட்டில் வாங்கி தந்துள்ளனர்.. தன்னுடைய மாமாவுக்கு சிகிச்சைக்கு தர வேண்டும் என்று சொல்லி, 6 லட்சம் வரை சுனிலிடம் பணம் வாங்கியுள்ளார் சுகாசினி... 6 லட்சம் வாங்கி கொண்டபிறகு, சுகாசினியை காணவில்லை.. அப்போதுதான் சுகாசினியை தேட ஆரம்பித்தனர்.. இறுதியில்தான் தெரிந்தது, சுகாசினிக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.. இப்போது இந்த மாப்பிள்ளையும், புகாருடன் போலீசுக்கு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications