Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சியை விட்டு விலகுறேன்.. YSRCP-யில் சேர்ந்த ஒரே வாரத்தில் அதிரடி முடிவு: அம்பத்தி ராயுடு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த நிலையில், தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக முன்பு கூறியிருந்தார் அம்பத்தி ராயுடு. கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவி இருந்தன.

 Former Cricketer Ambati Rayudu quits YSRCP after joining 9 days ago

அதனை உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி திருப்பதி ராயுடு, கடந்த வாரம், டிசம்பர் 28ஆம் தேதி ஆந்திரா முதலமைச்சர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் நாராயண சுவாமி, எம்.பி பெத்தி ரெட்டி மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற தகவல் வெளியானது. அம்பத்தி ராயுடு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு, குண்டூர் அல்லது மசூலிப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

 Former Cricketer Ambati Rayudu quits YSRCP after joining 9 days ago

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அம்பத்தி ராயுடு. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 9 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து அம்பத்தி ராயுடு விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தி ராயுடு, அரசியல் ரீதியாக அழுத்தங்களை எதிர்கொண்டாரா, வேறு கட்சிகளின் மிரட்டலுக்கு உள்ளானாரா, அல்லது வேறு கட்சியில் இணையப்போகிறாரா என பரபர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+