போலீஸ் துப்பாக்கியை பிடுங்கிய ஒருவன்.. சுட்டுவிட்டு ஓட பிளான்.. என்கவுண்டருக்கு முன் நடந்த சம்பவம்!
ஹைதராபாத்தில் 4 வன்புணர்வு குற்றவாளிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படும் முன் நடந்த சம்பவங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 4 வன்புணர்வு குற்றவாளிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படும் முன் நடந்த சம்பவங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் வன்புணர்வு வழக்கில் தற்போது மாபெரும் திருப்பம் நிகழ்ந்து இருக்கிறது. அங்கு குற்றம் செய்த 4 பேரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது.

போலீஸ் தகவல்
இந்த என்கவுண்டர் குறித்து ஹைதராபாத் போலீசார் கொடுத்த தகவலின்படி, காலை 3.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு விசாரணை செய்ய வேண்டும் என்று போலீஸ் சென்றது. அங்கு செல்லும் போது 4.50 மணி ஆகியுள்ளது. அதன்பின் 6 மணி வரை விசாரணை நடந்துள்ளது.

அமைதி
அதுவரை குற்றவாளிகள் அமைதியாக இருந்துள்ளனர். ஆனால் பொழுது விடிந்ததும், அதை பயன்படுத்திக் கொண்டு தப்பித்து ஓட முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு இருந்த இன்ஸ்பெக்டரை தாக்கி அவரின் துப்பாக்கியை குற்றவாளி ஒருவன் பிடுங்கி உள்ளான்.

துப்பாக்கி தாக்குதல்
துப்பாக்கியை போலீசை நோக்கி திருப்பிவிட்டு பயமுறுத்தி உள்ளான். இதனால் மற்ற மூன்று பேரும் தப்பித்து ஓட தொடங்கி உள்ளனர். பின் துப்பாக்கியை பிடுங்கிய குற்றவாளியும் அதை மேலே நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்று இருக்கிறான்.

காயம் அடைந்தனர்
இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த போலீஸ் படை அவர்களை நோக்கி சுட்டு இருக்கிறது. இந்த தாக்குதலில்தான் 4 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றாவளிகளின் தாக்குதல் முயற்சிதான் என்கவுண்டருக்கு காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications