ஹைதராபாத் என்கவுண்டர்.. சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு தீவிர ஆய்வு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இடத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு இன்று ஆய்வு செய்தது.
இந்த என்கவுண்டர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதை தொடர்ந்து ஏழு பேர் கொண்ட, உண்மை கண்டறியும் குழுவை, என்கவுண்டர் நடைபெற்ற இடத்துக்கு இன்று அனுப்பி வைத்துள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நாலு பேரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உடல்களை மனித உரிமை ஆணையத்தின் குழு என்று நேரடியாக சென்று ஆய்வு செய்தது.
ஒருபக்கம் மனித உரிமைகள் குழு ஆய்வு நடத்தி கொண்டிருக்கக் கூடிய நிலையில் கூட, சுட்டுக்கொல்லப்பட்ட நால்வர் மீதும், போலீசார் மீது தாக்குதல் நடத்துவதற்காக கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை காவல்துறையினர் புதிதாக பதிவு செய்து உள்ளனர். இன்று ஆய்வு நடத்திய, மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று நிருபர்களிடம் பேசிய என்கவுண்டரில், பலியான சென்னகேசவலு என்பவரின் கர்ப்பிணி மனைவி ரேணுகா, "எத்தனையோ குற்றங்களுக்காக, எத்தனையோ பேர் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் போலீசார் இதேமாதிரி சுட்டுக்கொல்ல வேண்டும். அதுவரை நான் கணவர் சென்னகேசவலு உடலை வாங்க மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications