மாரடைப்பால் திடீர் மரணம்.. பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்த போது 25 வயது இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் நிகழும் திடீர் மாரடைப்பு மரணங்கள் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்து உயிரிழப்பது, நடந்துக்கொண்டிருக்கும்போது அப்படியே சரிந்து விழுந்து மரணிப்பது போன்ற வீடியோக்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அந்த வகையில் தெலங்கானா மாநிலம் நாகோலில் இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. இங்கிருக்கும் உள்விளையாட்டு அரங்கில், சக இளைஞர்களுடன் 25 வயது இளைஞரான குண்ட்லா ராகேஷ் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்தார். இவருக்கு வந்த பந்தை மிஸ் செய்திருக்கிறார். இறகு பந்து, சற்று தள்ளி விழுந்திருக்கிறது. இதை ராகேஷ் குனிந்து எடுத்திருக்கிறார். அப்போது திடீரென கீழே மயங்கி விழுந்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அவரை காப்பாற்ற சக இளைஞர்கள் சிபிஆர் முதலுதவியை முயற்றித்திருக்கின்றனர். ஆனால் ராகேஷ் கண் முழிக்கவில்லை. எனவே உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்திருக்கிறார்கள். இருப்பினும் ராகேஷின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவர்கள், ராகேஷ் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் இதபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த 2023ம் ஆண்டு மட்டும் சுமார் 10 பேர் இதுபோன்ற திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
2023ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஹைதராபாத்தில் உறவினர் திருமணத்தில் பங்கேற்றிருந்த 40 வயது நபர் இதேபோல திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அடுத்த 2வது நாள் அதாவது பிப்ரவரி 22ம் தேதி ஹைதராபாத்தில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயது காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து, அதாவது பிப். 25ம் தேதி நிர்மல் மாவட்டத்தில் உறவினர் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கொஞ்சம் நாட்கள் கழித்து, அதாவது 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள விநாயகர் மண்டபத்தில் நடனமாடிக் கொண்டிருந்த 26 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த திடீர் மாரடைப்புக்கு பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர்.
1. ஹைப்பர்ட்ரோபிக் கார்டியோமயோபதி
2. அர்திமியாஸ்
3. அனோமாலஸ் கரோனரி ஆர்டரிஸ்
4. மயோகார்டிடிஸ்
5. டிலேட்டட் கார்டியோமயோபதி
6. மாரஃபன் சிண்ட்ரோம்
இதெல்லாம் திடீர் மாரடைப்புக்கான காரணத்திற்கான அறிவியல் பெயர்களாகும். இதய தசை தடிமனாவது பெரும்பாலும் இந்த மாரடைப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இது இதய ரத்த குழாய்களை சுருக்கி விடுகிறது. எனவே இதயத்திற்கு செல்லும் ரத்தம் அடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications