எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை.. நான் சாகட்டுமா? சிஏஏவிற்கு எதிராக கேசிஆர்.. விரைவில் தீர்மானம்!
தெலுங்கானாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முடிவு எடுத்துள்ளார்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முடிவு எடுத்துள்ளார்
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.முதலில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மாநிலம் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சிஏஏவை அமல்படுத்த மாட்டோம் என்றும் கேரள மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து பாஜக அரசு ஆட்சி செய்யாத பல மாநிலங்களில் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தெலுங்கானா
இந்த நிலையில் தெலுங்கானாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் சட்டசபையில் பேசினார். அதில் புதிய என்பிஆர் விதியின் மூலம், பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை மத்திய அரசு கேட்கிறது. இது மிக மிக தவறு.

உண்மை என்ன
உண்மையை சொன்னால் எனக்கும் கூட பிறப்பு சான்றிதழ் இல்லை. நான் எந்த நாடு என்று கேட்டால் எப்படி அதை நிருபிப்பேன். நான் என்ன சொல்வேன். நான் என்னுடைய கிராமத்தில், என்னுடைய வீட்டில் பிறந்தேன். அப்போது அங்கு மருத்துவமனை இல்லை. எனக்கு பிறப்பு சான்றிதழே இல்லை. எனக்கு பிறந்த போது எழுதிய ஜாதகம் மட்டும்தான் இருக்கிறது.

பிறப்பு சான்றிதழ்
இதைத்தான் பிறப்பு சான்றிதழ் போல பயன்படுத்தி வந்தனர். வேறு சான்றிதழ் எதுவும் என்னிடம் இல்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும். நான் சாக வேண்டுமா? எனக்கே பிறப்பு சான்றிதழ் இல்லாத போது, என் அப்பாவிற்கு பிறப்பு சான்றிதழ் எப்படி கிடைக்கும். நான் பணக்கார வீட்டில் பிறந்தவன். எங்கள் வீடு 580 ஏக்கரில் அமைந்து இருந்தது.

எனக்கு இல்லை
எனக்கே மருத்துவ வசதியோ, பிறப்பு சான்றிதலோ இல்லை. ஏழை மக்களிடம் அந்த சான்றிதழ்களை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். தலித் மக்கள் எப்படி இந்த சான்றிதல்களை வைத்து இருப்பார்கள். இந்தியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. இது மிக மிக தவறு. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். உலக மேடையில் இதனால் இந்தியாவின் மதிப்பு குறைந்துள்ளது.

உலக நாடுகள்
உலக நாடுகள் இதனால் இந்தியாவை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளது. ஐநா இந்தியாவை கண்டித்துள்ளது. உலகம் முழுக்க இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக நாங்கள் தீர்மானம் கொண்டு வருவோம். விரைவில் இதற்கான தீர்மானம் அவையில் தாக்கல் செய்யப்படும். வரும் நாட்களில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications