காங்கிரஸ் மீது எந்த கோபமும் இல்லை.. ஜெகன்மோகன் திடீர் அறிவிப்பு.. ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பம்
காங்கிரஸ் மீது எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை, அவர்கள் மீது எனக்கு வருத்தமும் இல்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஹைதராபாத்: காங்கிரஸ் மீது எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை, அவர்கள் மீது எனக்கு வருத்தமும் இல்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
என் அப்பாவின் தியாகத்தை அவமதித்தனர், தெலுங்கானாவை பிரித்து ஆந்திராவை கூறு போட்டார்கள்.. இதுதான் ஜெகன்மோகன் ரெட்டி தனது சகோதரி மற்றும் தொண்டர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் போது கூறியது.
2009ல் ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின், காங்கிரஸ் கட்சியில் இருந்த அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிளவு ஏற்பட தொடங்கியது.

எப்போது
அப்பாவின் நினைவாக ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய பேரணிக்கு காங்கிரஸ் கடுமையான கண்டங்களை தெரிவித்தது. அதே சமயம் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டமும் பெரிய அளவில் நீடித்து வந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தனது சொந்த எம்பியான ஜெகன்மோகன் ரெட்டியை நேரடியாக விமர்சனம் செய்தது.

பிரிவு
இந்த பிரச்சனைகள் தொடர்ந்து நடக்கவே 2010ல் ஆந்திரா பிரிவிற்கு காங்கிரஸ் தலையாட்டியது. தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்த கோபத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்தார். அதன்பின் 2009ல் இருந்து இயங்கி கொண்டு இருந்த சிறிய கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் 2010ல் சேர்ந்து தலைவரானார்.

எதிர்ப்பு
இந்த நிலையில்தான் தற்போது தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், தெலுங்கு தேசம் என்ற வரிசையாக அனைத்து கட்சிகளையும் ஜெகன் மோசமாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் புதிய திருப்பமாக காங்கிரஸ் மீதான கோபம் எனக்கு தணிந்துவிட்டது. காங்கிரஸ் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதை எல்லாம் தாண்டி நான் வந்துவிட்டேன் என்று ஜெகன் மோகன் கூறியுள்ளார்.

புதிய டிவிஸ்ட்
இதன் மூலம் ஆந்திராவில் காங்கிரஸ் - ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணி அமைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கிறது என்பதை பொறுத்தே அங்கு ஆட்சி அமையும்.

ஜெகன்மோகன் ரெட்டி
அதனால்தான் இப்போதே ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசுக்கு தூதுவிட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள். அதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே இருக்கிறார். ராகுலும் அவரும் இப்போதும் நெருக்கமாகவே இருப்பதால் ஆந்திர பிரதேச அரசியலில் மிக குழப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications