ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும்.. பிரசாந்த் கிஷோர் கணிப்பு
ஹைதராபாத்: ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையின ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அங்கு மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. ஆந்திரவை ஆளும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி (சந்திரபாபு நாயுடு) பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன.

இந்நிலையில் நேற்று நடந்த முடிந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆந்திராவின் பல்நாடு, கடப்பா, அன்னமாயா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடந்தது. பல்நாடு மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அச்சம் எழுந்தது. தெனாலி சட்டசபை தொகுதியில் வாக்காளர் ஒருவரை தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சிவகுமார் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் குண்டூர் மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபி ரெட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டை தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு தாக்கினார்கள். தும்மரகோட்டா பகுதியில் தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. மாச்சர்ல தொகுதி செட்டிபாளையம், ரெயில்வே கொடூர் தொகுதியின் தலவாய்பள்ளி வாக்குச்சாவடிகளில் மர்ம கும்பல் புகுந்து, அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை உடைத்து நொறுக்கியதால், ஓட்டுப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சித்தூரின் மாண்டி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பணியில் இருந்த ஆளுங்கட்சி ஏஜென்டு சுரேஷ் ரெட்டியை தெலுங்குதேசம் கட்சியினர் கத்தியால் குத்தியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இப்படி பல்வேறு சம்பவங்களுடன் சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இந்நிலையில், ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது கணிப்பினை தெரிவித்துள்ளார். அது தொடர்பாக செய்தியாளர்ளுக்கு பிரசாத் கிஷோர் அளித்த பேட்டியில், "ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இதே போல 25 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி 15 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவே நான் நம்புகிறேன். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ச்சியான தவறுகளை செய்திருக்கிறார். முதலில் ஜெகன் மோகன் ரெட்டி தனது அம்மாவையும், தங்கையையும் பார்த்திருக்க வேண்டும். இருவரும் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.
2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றிருக்கிறார்கள். அதுவே ஜெகனுக்கு ஆபத்தானது. கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல பாவித்துக் கொண்டு நடந்தார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துரோகம் செய்துள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் உதவி இருக்காவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார். கடந்த சில மாதங்களாக ஜெகன் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறி வருகிறேன். இது எனது கணிப்பு" இவ்வாறு ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications