தெலுங்கானா: 'ஹைதராபாத்’ பெருநகரங்களில்தான் ஒர்ஸ்ட் வாக்குப் பதிவு.. இவ்வளவு மோசமாகவா இருக்கும்!
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலில் தெலுங்கானாவின் ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில்தான் மிக மோசமான அளவு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
லோக்சபா தேர்தலின் 4-வது கட்டமாக தெலுங்கானாவில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. தெலுங்கானாவின் 17 லோக்சபா தொகுதிகளிலும் நேற்று 64.74% வாக்குகள் பதிவாகின.

தெலுங்கானா மாநிலத்தின் 4 முக்கியமான பெருநகரங்கள் ஹைதராபாத், செகந்திராபாத், மல்காஜ்கிரி, செவல்லா ஆகியவை. இந்த 4 பெரு நகரங்களிலும் லோக்சபா தேர்தலில் வாக்குப் பதிவு மிக மோசமாக குறைந்துள்ளது.
இதில் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் மிக மோசமாக வெறும் 39.17% வாக்குகள் பதிவாகின. 2019-ம் ஆண்டு தேர்தலில் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் 45% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஹைதராபாத் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மலக்பேட் தொகுதியில் மிக மிக குறைந்தபட்சமாக வெறும் 37.84% வாக்குகள் மட்டுமே பதிவாகின. சார்மினாரில் 38%, சந்திரயான்குட்டாவில் 38.24% வாக்குகள் பதிவாகின. கர்வானில் சற்று ஆறுதலாக 40.57% வாக்குகள் பதிவாகின.
செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் வெறும் 42.48% வாக்குகளே பதிவாகின. 2019-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 3% குறைவு
இந்தியாவில் மிக. அதிக அளவிலான வாக்காளர்களைக் கொண்டது தெலுங்கானாவின் மல்காஜ்கிரி தொகுதி. மொத்தம் 37.80 லட்சம் வாக்காளர்களைக் கொண்டது. இந்த தொகுதியிலும் கூட 50% கூட வாக்குகள் பதிவாகவில்லை. மல்காஜ்கிரி தொகுதிதான் மினி இந்தியா என்று அழைக்கப்படும். இத்தொகுதியில்தான் பல்வேறு மொழி பேசுகிற பல்வேறு மாநிலத்தவர் வசிக்கின்றனர். மல்காஜ்கிரி தொகுதியில் 49.60% வாக்குகளே பதிவாகின. 2019-ம் ஆண்டும் ஏறத்தாழ இதே அளவு வாக்குகளே பதிவாகின. செகந்திராபாத் கண்டோமெண்ட் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 50.34% வாக்குகள் பதிவாகின். இது மல்காஜ்கிரி தொகுத்யில் அடங்கும்.
செவல்ல லோக்சபா தொகுதியில்தான் ஐடி நிறுவனங்களை உள்ளடக்கிய சைதராபாத் இடம் பெறுகிறது. இத்தொகுதியில் 53.15% வாக்குகள் பதிவாகின. அதிக அளவிலான சாஃப்ட்வேர் என்ஜினியர்களைக் கொண்ட செரிலிங்கம்பள்ளி பகுதியில் வெறும் 41.40% வாக்குகளே பதிவாகின.
ஹைதராபாத்தில் வசிப்பவர்கள் பொதுவாக ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். வார இறுதி நாட்களில் விடுமுறை நாட்களில் ஆந்திராவுக்கு சென்றுவிடுவர். இதனால் ஹைதராபாத் நகரங்கள் வெறிச்சோடி விடும். இதனால்தான் ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்கள் நேற்று காலை முதலே வாக்குப் பதிவில் படு மந்தமாக இருந்தன.
செகந்திராபாத் லோக்சபா தொகுதிக்குட்பட்ட நம்பள்ளியில் 37.30% வாக்குகளே பதிவாகின. திரை உலக பிரபலங்கள் உள்ளிட்ட விவிஐபிகளின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 39.38% வாக்குகள் பதிவாகின.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications