பரிதாப நிலையில் பாஜக.. தெலுங்கானா கிரீடம் கேசிஆருக்கே! காங்கிரஸுக்கு ஜஸ்ட் மிஸ் -கருத்துக்கணிப்பு
ஐதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியே வெற்றிபெறும் என டெமாக்ரசி டைம்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.
ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தென் மாநிலமான தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி ஆட்சி 2 வது முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியுடன் இந்த ஆட்சிகாலம் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி வரும் தெலுங்கானாவில் நவம்பர் 30 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகியவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி கடந்த ஆகஸ்டு மாதமே வேட்பாளர் பட்டியலை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இம்முறை பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும், சில கருத்துக்கணிப்புகள் பிஆர்எஸ் கட்சி வெற்றிபெறும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்து உள்ளது. அதன்படி 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் மீண்டும் ஆளும் பிஆர்எஸ் கட்சியே ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பான்மைக்கு 60 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் அக்கட்சி 61 தொகுதிகளில் வென்று நூலிழையில் ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 49 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி அடையும் எனவும் கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications