Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசியில் ஏறி சம்பவம் செய்த நபர்.. ஒட்டுமொத்த பயணிகளும் அலறல்.. வந்தே பாரத் ரயிலில் ஷாக்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஆந்திராவில் வந்தே பாரத் ரயிலுக்குள் டிக்கெட் எடுக்காமல் ஏறிய நபர், ரயிலின் பாதுகாப்பு அம்சங்கள் தெரியாமல் செய்த ஒரு செயல் ஒட்டு மொத்த ரயில் பயணிகளையும் அதிரவைத்துவிட்டது. இதனால் ரயிலும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் ரயில் பயணிகளை கவரும் விதமாக மேம்படுத்தபட்ட சொகுசு வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை இதுவரை நாடு முழுவதும் 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Passenger boarded the Vande Bharat train without ticket, smoked a cigarette inside passengers panic

மேலும் பல வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரையும், சென்னையில் இருந்து கோவை வரையும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை - நெல்லை இடையேயான வழித்தடத்திலும் விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. சாய்வு இருக்கைகள், விசாலமான ஜன்னல்கள், பயோ டாய்லட், வைஃபை வசதி என ரயில்களில் வசதியை அடுக்கிக் கொண்டே போகலாம். சாதாரண வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் நேரமும் ஓரளவுக்கு இந்த ரயிலில் பயணம் செய்வதால் மிச்சமாகும்.

Passenger boarded the Vande Bharat train without ticket, smoked a cigarette inside passengers panic

அதுபோக பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டதாகவும் தீ விபத்து ஏற்படால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதி உள்ளிட்ட தீ தடுப்பு அம்சங்களும் உள்ளது. வந்தே பாரத் ரயில்கள் விடப்பட்டதில் இருந்தே அடிக்கடி செய்திகளில் அடிபட்டு கொண்டே இருக்கிறது. ரயில்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாவது... ரயில்களில் கல் வீச்சு சம்பவங்கள்... செல்பி எடுக்க ஆசைப்பட்டு ரயிலுக்குள் மாட்டிக்கொண்டது என அவ்வப்போது வந்தே பாரத் ரயில்களில் எதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்த நிலையில் தான், வந்தே பாரத் ரயிலுக்குள் டிக்கெட் எடுக்காமல் ஏறி ஒருவர் செய்த காரியம் ஒட்டுமொத்த பயணிகளையும் அலற வைத்துவிட்டது. அதுகுறித்த விவரத்தை பார்ப்போம்:- திருப்பதியில் இருந்து செகந்திரபாத்திற்கு வந்தே பாரத் ரயில் வழக்கம் போல் சென்று கொண்டு இருந்தது. ரயில் குண்டூர் ரயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது வந்தே பாரத் ரயிலுக்குள் டிக்கெட் எடுக்காமல் ஏறிய நபர் ஒருவர், டாய்லட்டிற்குள் சென்று பூட்டிக்கொண்டார்.

Passenger boarded the Vande Bharat train without ticket, smoked a cigarette inside passengers panic

டாய்லடிற்குள் இருந்தபடி சிகரெட்டை பற்ற வைத்துள்ளர். ரயிலிலும் தீ விபத்துக்களை ஏற்படுத்தும் பாதுகாப்பு அம்சம் இருப்பது தெரியாமல் அவர் சிகரெட்டை பற்ற வைக்கவும், ரயிலில் தானியங்கி எச்சரிக்கை ஒலி செயல்பட ஆரம்பித்து விட்டது. அதேபோல தீ தடுப்பு கருவிகளும் செயல்பட தொடங்கிவிட்டன. ரயில் பெட்டி முழுவதும் தீ தடுப்பு கருவி ஏரோசோலை தெளிக்க ஆரம்பித்து விட்டது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.

உடனடியாக எமர்ஜென்சி எண்ணை தொடர்பு கொண்டு ரயிலில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வந்தே பாரத் ரயில் அவசர அவசரமாக மனுபுலு ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ரயில்வே போலீசார், கழிவறைக்குள் தீ பிடித்து விட்டதாக நினைத்து தீ அணைக்கும் கருவியை வைத்து கொண்டு டாய்லட் ஜன்னலை உடைத்தனர். ஆனால், உள்ளே ஒருவர் புகை பிடித்தபடி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ரயிலில் இருந்து இறக்கி விட்டதோடு கைது செய்தனர். பின்னர் வழக்கம் போல ரயில் புறப்பட்டு சென்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+