ராகுல் இதை பண்ணியிருந்தால் இப்படி பேச மாட்டாங்க! தயாநிதி மாறன் பேச்சு குறித்து பிஆர்எஸ் கவிதா தாக்கு
ஐதராபாத்: இந்துக்களுக்கும் இந்தி பேசும் மாநில தொழிலாளர்களுக்கும் எதிரானவர் இல்லை என்பதை இந்த தேசத்திற்கு ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்று பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் கவிதா கூறியுள்ளார்.
திமுக எம்பி தயாநிதி மாறன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பாஜகவினரால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவில் தயாநிதி மாறன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தயாநிதி மாறன் கூறுகையில், "இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள், சாலைகள், கழிவறைகளை சுத்தம் செய்வதில் தான் ஈடுபடுகிறார்கள்.

ஆங்கிலம் தெரிந்ததால் தான் நமது இளைஞர்கள் படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி இந்தி என்கிறார்களே.. அவர்கள் நிலையைப் பாருங்கள். இன்று கட்டிடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை கற்று இங்கேயே வீடு கட்டி தங்குகிறான்.
காங்கிரசுக்கு நெருக்கடி: சாலையைச் சுத்தம் செய்கிறான். டாய்லெட் கழுவுகிறார்கள். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை'' எனக் கூறியிருந்தார். தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றாக திமுக உள்ள நிலையில், அந்தக் கட்சியினர் இந்தி பேசும் மாநிலங்களுக்கு எதிராக பேசும் இந்தக் கருத்துக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.பிக்களின் இந்த பேச்சுக்களை வைத்துக் கொண்டு பாஜக அரசியல் ரீதியாக இந்தியா கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. தற்போது இந்த கோதாவில் தெலுங்கனாவில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்த பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியும் இறங்கியுள்ளது. சந்திரசேகர் ராவின் மகளும் தெலுங்கானா எம்.எல்.சியுமான கவிதா, ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார்.
ஒற்றுமை குறித்து பேசி வந்தார்: இது தொடர்பாக கவிதா கூறியிருப்பதாவது:- இது ஒரு கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாதிரியான அறிக்கைகள் நமது தேசத்தின் கட்டமைப்பை எவ்வாறு சீர்குலைக்கப் போகிறது என்பதை பற்றியது. ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும் இந்தியா கூட்டணியில் அந்தக் கட்சி அங்கம் வகிக்கிறது. ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது தொடர்ந்து தேச ஒற்றுமை குறித்து பேசி வந்தார்.
ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்: தற்போது அதை வெறும் ஸ்டண்ட் போலத்தான் தெரிகிறது. ஏனெனில், இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் சனாதன தர்மம் குறித்து பேசிய போது ராகுல் காந்தி எதிர்த்து இருக்க வேண்டும். சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு ராகுல் காந்தி கருத்து கூறியிருந்தால் இதுபோன்ற கருத்துக்களை வேறும் யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.
அத்தகைய பேச்சுக்களை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நான் இந்துக்களுக்கும் இந்தி பேசும் மாநில தொழிலாளர்களுக்கு எதிரானவன் இல்லை என்பதையும் இந்த தேசத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்" இவ்வாறு கவிதா கூறினார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications