இந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம்
ஹைதராபாத்: கொரேனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் தள்ளாடிய நிலையில், ரஷ்யா 'ஸ்புட்னிக்-V' என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் உலக சுகாதார அமைப்பு, மற்றும் மேற்கத்திய உலக நாடுகள் ரஷியாவின் தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பின. நம்பகத்தன்மை இல்லை என்றும், 3வது டிரையல் நடக்கவில்லை என்றும் குற்றம்சாட்டின.
இதற்கிடையில்தான் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது 90 சதவீத பாதுகாப்பானது என அறிவித்தது.

92 சதவீதம் வெற்றி
இந்த அறிவிப்பு சில நாட்கள் முன்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, ஸ்புட்னிக்-V தடுப்பூசி, 92 சதவீதம் அளவுக்கு பயன் அளிக்கிறது என்று ரஷ்யா அறிவித்தது. 3ம் கட்ட பரிசோதனையில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு டோஸ் கொடுக்கப்பட்டதாகவும், 14 நாட்கள் இடைவெளியில் 16 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டதாகவும் அதன்பின் கொரோனா பாசிட்டிவ் நபர்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாகவும், இதில் 92 சதவீதம் பயன் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா வருகை
இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசி இன்று இந்தியா வந்தது. ஹைதராபாத்திலுள்ள டாக்டர்.ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு மருந்துகள் வந்து சேர்ந்துள்ளன. அவை குறிப்பிட்ட வெப்ப நிலையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கிளினிக்கல் டிரையல்களை டாக்டர்.ரெட்டிஸ் ஆய்வகம் நடத்த உள்ளது. அப்போது பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பரிசோதிக்கப்படும்.

கிளினிக்கல் டிரையல்
ஆர்டிஐஎப் 10 கோடி டோஸ்வழங்கும். கடந்த செப்டம்பர் மாதம் கிளினிக்கல் டிரையல் மற்றும் இந்த தடுப்பு மருந்து சப்ளைக்கு ஒப்பந்தம் செய்தது டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம். ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஸ்புட்னிக் V தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றில் இணைந்து செயல்படும் என்று ஆர்.டி.ஐ.எஃப் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

10 கோடி டோஸ்கள்
மொத்தம் 10 கோடி ஸ்புட்னிக் V தடுப்பூசி டோஸ்களை டாக்டர் ரெட்டீசுக்கு ஆர்.டி.ஐ.எஃப் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications