தமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8-ம் தேதியன்று தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுகொண்டார். இதையடுத்து அவருக்கு தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இன்னும் பலர் தமிழிசையை நேரில் சந்திப்பதற்காக நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா வாழ்த்துக்கூறினர்.

தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8-ம் தேதியன்று தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுகொண்டார். இதையடுத்து அவருக்கு தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்ட்டோர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இன்னும் பலர் தமிழிசையை நேரில் சந்திப்பதற்காக நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.

sarathkumar and radhika to meet governor tamilisai saoundararajan

இந்நிலையில், இன்று தெலுங்கானா ஆளுநர் மாளிகைக்கு சென்ற சமத்துவ மக்கள் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்துக்கூறினர். மேலும், ஆளுநர் பதவிக்கு உங்களை நியமித்திருப்பது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும், பொருத்தமான காரியத்தை பிரதமர் மோடி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

சரத்குமார், ராதிகா தம்பதியை இன்முகத்தோடு வரவேற்ற தமிழிசை சவுந்தரராஜன் தனது செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கினார். மேலும்,இருந்து மதிய உணவு சாப்பிட்டு செல்லுமாறு கூறிய நிலையில், சரத்குமாரும், ராதிகாவும் தங்களுக்கு உள்ள பணிகளை சுட்டிக்காட்டி அங்கிருந்து புறப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+