அடேங்கப்பா 6 வாக்குறுதி.. தெலுங்கானாவில் பிரம்மாஸ்திரம் எடுக்கும் காங்கிரஸ்! சோனியாவுக்காக வெயிட்டிங்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான 6 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று வெளியிட உள்ளார்.
தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சிகாலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து 119 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட உள்ளன. இந்த முறை காங்கிரஸ், பி.ஆர்.எஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து இருக்கிறது.
அதில் குறிப்பாக கர்நாடக தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுத்த திட்டங்களை தெலுங்கானாவிலும் அக்கட்சி பயன்படுத்த இருக்கிறது. கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற உதவிய திட்டங்கள் என்னவென்று கண்டறிந்து அதன் அடிப்படையில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தின் விஜய பேரியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி கலந்துகொள்ள உள்ளார்.
இந்த கூட்டத்தில் ஆறு முக்கிய தேர்தல் உத்தரவாதங்களை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த வாக்குறுதிகள் தெலங்கானா மாநில தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அடிப்படையாக அமையும். அதே நேரம் தெலங்கானா மாநிலத்திற்கு அறிவிக்கப்படும் 6 உத்தரவாதங்களும் கர்நாடகாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவாதங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டினர்.
மக்களுக்கு வலுவான நம்பிக்கையை வழங்கும் வகையில் முக்கிய வாக்குறுதிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அந்த திட்டங்கள் மாநில தேவைகளுக்கு ஏற்ப தனித்துவமான அணுகுமுறையுடன் இருக்கும் என்றும், முழுக்க முழுக்க தெலங்கானா மாநிலம் சார்ந்ததாக இருக்கும் என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்து உள்ளார்.
சோனியா காந்தி அறிவிக்க உள்ள ஆறு வாக்குறுதிகளில் மூன்று வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ரூ.3,000 உதவி வழங்குவது, ரூ.500 க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் வழங்குவது, மலிவான வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் உதவி ஆகியவை அடங்கும்.
இன்று ஹைதராபாத்தில் காங்கிரஸின் விஜய பேரி கூட்டம் இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டங்கள் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications