தெலுங்கானாவில் ஷாக்...சீட்டு கட்டு போல் சரிந்த ஸ்டேடியம்.. கபடி போட்டியை பார்த்த 100 பேர் காயம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள சூர்யாபேட் நகரத்தில் தேசிய ஜூனியர் கபடி போட்டி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மாடம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யாபேட் நகரத்தில் 47வது தேசிய அளவிலான கபடி போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிகளை தெலுங்கானா மாநில கபடி அசோசியேன் மற்றும் சூர்யாபேட் மாவட்ட கபடி அசோசியேன் ஆகியவை இனைந்து நடத்தின.
இந்த கபடி போட்டி தொடரை தெலுங்கானா மாநில மின்சார துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, சூர்யாபேட்டில் உள்ள காவலர்கள் மைதானத்தில் தொடங்கி வைத்தார். தெலுங்கானா மாநில விளையாட்டு துறை அமைச்சர் சீனிவாச கௌடா இன்று விளையாட்டு போட்டி நடந்த போது அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

விபத்துக்கு காரணம்
இந்த விளையாட்டு போட்டியை காண 5000க்கும் மேற்பட்டோர் மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்தனர். அதிகப்படியான கூடடத்தினர் அமரந்திருந்ததால் அதிக பாரம் தாங்காமல் கேலரி அடிந்து சரிந்தது. இதனால் இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் அதிகப்படியான கூட்டமே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது என்றார்.

100 பேர் காயம்
காயம் அடைந்த அனைவரும் சூர்யாபேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 20க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் பேர்
உள்ளூர் செய்தியாளர்கள் நிலைமை குறித்து கூறுகையில், மைதானத்தில் மரத்தாலான பலகைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் மூன்று வெவ்வேறு கேலரிகள் கட்டப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் 20 அடி உயரத்திலும் 240 அடி அகலத்திலும் இருந்தன. ஒவ்வொரு கேலரியிலும் மொத்த கொள்ளளவு 1500 ஆகும். இருப்பினும், அதிகப்படியான மக்கள் இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பார்வையாளர்கள் கேலரியை அதன் திறனை விட அதிகமாக ஆக்கிரமித்தததால் அது திடீரென சரிந்து விழுந்தது. என்று கூறினார்கள்.
|
தேசிய போட்டி
தெலுங்கானாவில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கபடி போட்டி தொடரில் 29 மாநிலங்களைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நான்கு நாட்கள் -நாக் அவுட் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட இருந்தன.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications