90% சிட்டிங் சீட்.. கேசிஆர் வகுத்த அதிரடி வியூகம்.. தெலுங்கானாவில் பாஜக பிளான் தவிடுபொடி?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் ஒரு சிறு அதிருப்தியும் வந்துவிடவே கூடாது என்பதற்காக தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 90% பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர முடிவு செய்துள்ளாராம் முதல்வர் கே.சந்திரசேகர ராவ். இதனால் அதிருப்தியாளர்களை இழுக்கும் பாஜக கனவை கலைத்துள்ளார்.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி தங்களை வீழ்த்த காங்கிரஸ், பாஜகவால் முடியவே முடியாது என கெத்துடன் வலம் வருகிறது. ஆனால் எப்படியும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க முடியும் என்ற கனவில் வலம் வருகிறது காங்கிரஸ், பாஜக. இந்த இரு கட்சிகளில் காங்கிரஸ்தான் பிஆர்எஸ் ஆட்சியை வீழ்த்தக் கூடிய வலிமையுடன் இருக்கிறது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜக தேர்தலில் படுபயங்கரமாக விஸ்வரூபம் எடுக்கும் எனவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

இதனிடையே தெலுங்கானா தேர்தலில் எப்படியும் சீட் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கையில் முதல்வர் கேசிஆர் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட படங்களுடன் போஸ்டர்களை ஒட்டி 'தேவுடு' காத்து கொண்டிருக்கின்றனர் பிஆர்எஸ் சீனியர் நிர்வாகிகள். ஆனால் முதல்வர் கேசிஆர் வேறு ஒரு கணக்குப் போடுகிறார் என அக்கட்சி வட்டாரங்கள்.
தெலுங்கானா சட்டசபையில் மொத்த இடங்கள் 119. இதில் பிஆர்எஸ் கட்சிக்கு மட்டும் 104 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 104 பேரில் 20 பேருக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டு வந்தது. ஆனால் கேசிஆர் தமது கணக்கை மாற்றிக் கொண்டிருக்கிறாராம். அதாவது சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 90% பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது என முடிவு செய்துள்ளாராம். இதனால் சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 10 பேர் மட்டுமே வேட்பாளராக முடியாமல் போகுமாம்.
அதேநேரத்தில் உங்க சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 104 பேருக்கும் மீண்டும் சீட் கொடுத்து பாருங்க.. தேர்தல் களம் எப்படி புரட்டிப் போடப் போகுதுன்னு தெரியும் என ஏற்கனவே தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, கேசிஆருக்கு சவால் விட்டிருந்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுப்பது என்கிற முடிவில் இருக்கிறாராம் கேசிஆர். இதனால் சில மாவட்டங்களில் அதிருப்தி வெடித்தாலும் சமாளிக்க முடியும் என்பது கேசிஆர் நம்பிக்கையாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications