BRS vs Congress: தெலுங்கானா சட்டசபை தேர்தல்: அனல் பிரசாரம் அத்தனையும் 5 மணியுடன் ஓய்ந்தது!
ஹைதராபாத்: தெலுங்கானா பல மாதங்களாக நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தெலுங்கானா சட்டசபைக்கு நாளை மறுநாள் (நவம்பர் 30) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்தில் 2014,2018 சட்டசபை தேர்தல்களில் இன்றைய பிஆர்எஸ் கட்சி - அன்றைய டிஆர்எஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 2 முறை ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி தற்போது 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சொற்பமான இடங்களில்தான் வென்று வந்தது. ஆனால் இம்முறை காங்கிரஸ் விஸ்வரூபம் எடுக்கும்; ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்றன பெரும்பாலான கருத்து கணிப்புகள்.
இந்த இரு கட்சிகளுக்கு இடையே பாஜகவும் களத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டனர். ஆனாலும் பாஜகவுக்கு அதிகபட்சம் 6 இடங்கள்தான் கிடைக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா சட்டசபை தொகுதிகள் மொத்தம் :119
தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்: 60
தெலுங்கானா வாக்காளர்கள்: ஆண்கள் 1,58,71,493 ; பெண்கள் 1,58,43,339;
3-ம் பாலினத்தவர் 2,557
தெலுங்கானாவில் களம் காணும் வேட்பாளர்கள்: 2,290
எல்.பி.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 48 வேட்பாளர்கள் போட்டி
பன்ஸ்வாடா, நாராயண்பேட் தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 7 வேட்பாளர்கள் போட்டி
2014 தெலுங்கானா தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்
பிஆர்எஸ் கட்சி- 99 இடங்கள்
காங்கிரஸ் கட்சி -7 இடங்கள்
ஓவைசி கட்சி- 7 இடங்கள்
பாஜக -1 இடம்
2018 தெலுங்கானா தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்
பிஆர்எஸ் கட்சி- 88 இடங்கள்
காங்கிரஸ் கட்சி -19 இடங்கள்
ஓவைசி கட்சி- 7 இடங்கள்
பாஜக - 5 இடங்கள்
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications