இப்படியே தினமும் ஓடிப் போனா எப்படி? தெலுங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் பிஆர்எஸ்-க்கு தாவல்
ஹைதராபாத்: தெலுங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் அனுகுல ராகேஷ் ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும் அனுகுல ராகேஷ் ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்கின்றன தகவல்கள்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 119 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் தொங்கு சட்டசபைக்கும் சாத்தியம் இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் கட்சி மாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 6 முறை கட்சி தாவிய முன்னாள் பாஜக எம்பி விவேக் நேற்று முன்தினம் அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் காங்கிரஸில் இணைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் அனுகுல ராகேஷ், பாஜகவில் இருந்து விலகி உள்ளார். அனுகுல ராகேஷ் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார்.












Click it and Unblock the Notifications