Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனலடிக்கும் தெலங்கானா அரசியல் களம்.. 20 தொகுதிகளில் காங்கிரஸ் சுருங்கும்.. அடித்து சொல்லும் கேசிஆர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வெறும் 20 தொகுதிகளில் சுருங்கிவிடும் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்.

தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. எனவே இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. பிரசாரத்தில் ஒருவரையொருவர் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர்.

Telangana CM Chandrasekhara Rao has criticized that Congress will shrink in 20 constituencies

அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரேவந்த் ரெட்டியின் சொந்த தொகுதியான கோடங்கல் தொகுதியில் நடந்த பிஆர்எஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், "ரேவந்த் ஒரு நில அபகரிப்பாளர். அவரது சொந்த தொகுதியிலே அவர் ஏராளமான நிலங்களை அபகரித்திருக்கிறார். ஆனால் இது குறித்து அவருக்கு எந்த மனகசப்பும் கிடையாது. அவர் மாதிரியான ஆட்கள் அரசியலில் இருக்க வேண்டுமா? காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வராது. அக்கட்சி வெறும் 20 சீட்டில் சுருங்கிவிடும்.

அவர் பிஆர்எஸ் எம்எல்ஏக்களை ரூ.50 லட்சம் கொடுத்து வாங்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். குற்ற வழக்கில் சிறை சென்று திரும்பிய பின்னரும் கூட அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. தற்போது முதல்வர் கனவில் இருக்கிறார். மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். எனக்கு முதல்வர் பதவி மீது மோகம் கிடையாது. நமது மாநிலத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே நோக்கம்" என்று விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் ரேவந்த் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நிஜாமாபாத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், "சந்திரசேகர ராவ் விரைவில் தன்னுடைய முதலமைச்சர் பதவியை இழக்க போகிறார் என்பதை உணர்ந்திருக்கிறார். காங்கிரஸ் தெலங்கானாவில் 80 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். ஒருவேளை 80 தொகுதிகளுக்கு குறைவாக பெற்றால் சந்திரசேகர ராவ் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்.

பொதுமக்களின் பல லட்சம் கோடி பொது பணத்தை கேசிஆரின் குடும்பம் சுருட்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கேசிஆரின் மகள் கவிதாவை தோற்கடித்ததற்காக நிஜாமாபாத் மக்கள் மீது அவர் வெறுப்பில் இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரும் போது 100 நாட்களில் சர்க்கரை ஆலைகளை திறப்பதாக உறுதியளித்தார். ஆனால் 10 ஆண்டு கடந்தோடிவிட்டது. போதாத குறைக்கு விவசாயிகளின் நிலங்களையும் அவர் அபகரிக்க முயற்சிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+