அனலடிக்கும் தெலங்கானா அரசியல் களம்.. 20 தொகுதிகளில் காங்கிரஸ் சுருங்கும்.. அடித்து சொல்லும் கேசிஆர்
ஹைதராபாத்: தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வெறும் 20 தொகுதிகளில் சுருங்கிவிடும் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. எனவே இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. பிரசாரத்தில் ஒருவரையொருவர் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர்.

அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரேவந்த் ரெட்டியின் சொந்த தொகுதியான கோடங்கல் தொகுதியில் நடந்த பிஆர்எஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், "ரேவந்த் ஒரு நில அபகரிப்பாளர். அவரது சொந்த தொகுதியிலே அவர் ஏராளமான நிலங்களை அபகரித்திருக்கிறார். ஆனால் இது குறித்து அவருக்கு எந்த மனகசப்பும் கிடையாது. அவர் மாதிரியான ஆட்கள் அரசியலில் இருக்க வேண்டுமா? காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வராது. அக்கட்சி வெறும் 20 சீட்டில் சுருங்கிவிடும்.
அவர் பிஆர்எஸ் எம்எல்ஏக்களை ரூ.50 லட்சம் கொடுத்து வாங்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். குற்ற வழக்கில் சிறை சென்று திரும்பிய பின்னரும் கூட அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. தற்போது முதல்வர் கனவில் இருக்கிறார். மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். எனக்கு முதல்வர் பதவி மீது மோகம் கிடையாது. நமது மாநிலத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே நோக்கம்" என்று விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் ரேவந்த் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
நிஜாமாபாத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், "சந்திரசேகர ராவ் விரைவில் தன்னுடைய முதலமைச்சர் பதவியை இழக்க போகிறார் என்பதை உணர்ந்திருக்கிறார். காங்கிரஸ் தெலங்கானாவில் 80 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். ஒருவேளை 80 தொகுதிகளுக்கு குறைவாக பெற்றால் சந்திரசேகர ராவ் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்.
பொதுமக்களின் பல லட்சம் கோடி பொது பணத்தை கேசிஆரின் குடும்பம் சுருட்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கேசிஆரின் மகள் கவிதாவை தோற்கடித்ததற்காக நிஜாமாபாத் மக்கள் மீது அவர் வெறுப்பில் இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரும் போது 100 நாட்களில் சர்க்கரை ஆலைகளை திறப்பதாக உறுதியளித்தார். ஆனால் 10 ஆண்டு கடந்தோடிவிட்டது. போதாத குறைக்கு விவசாயிகளின் நிலங்களையும் அவர் அபகரிக்க முயற்சிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications