பரபரக்கும் தெலுங்கானா தேர்தல்.. களத்தில் 3 முக்கிய கட்சிகள்.. என்ன நடக்கும்?
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் சோதனையான தேர்தலாக இருக்க போகிறது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் சோதனையான தேர்தலாக இருக்க போகிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு சில மாதம் முன் பதவி விலகினார். இதனால் அங்கு ஆட்சி கலைந்தது. அவரது ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் மீதம் உள்ள நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்த நிலையில் தெலுங்கானாவிற்கு வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு தேர்தல் குறித்த கூட்டணிகள், விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டது.
தெலுங்கானாவில் இரண்டு முனை போட்டி நிலவி வருகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணியும் இந்த தேர்தலில் மோத உள்ளது. இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மிகவும் வலுவாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணிக்கு முன்பை விட இப்போது ஆதரவு குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளது. தெலுங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் அங்கு போட்டியிட வாய்ப்பில்லை என்று தகவல் வருகிறது.
மாறாக இந்த இரண்டு கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு கேட்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் பிரபலமாக இருந்தாலும் தெலுங்கானாவில் அந்த அளவிற்கு பிரபலம் இல்லை. இதனால் தெலுங்கானாவில் போட்டியிட்டு பெயரை கெடுத்துக் கொள்வதற்கு பதில், பின்பக்கம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேலை செய்ய வாய்ப்புள்ளது.
பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இதேபோல்தான். அந்த கட்சிக்கும் தெலுங்கானாவில் பெரிய வரவேற்பு இல்லை. அதேபோல் இந்த கட்சி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு அவ்வப்போது ஆதரவாக பேசுவதால், அந்த கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்கவும் வாய்ப்புள்ளது.
இது தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிய இடியாக மாறியுள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications