காங்கிரஸை விடவேமாட்டோம்..தெலுங்கானாவில் கூட்டணி போடும் பிஆர்எஸ்,பாஜக, ஓவைசி கட்சி? பெரிய ட்விஸ்ட்
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியுடன் பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அன்றயை தினம் ஒரே கட்டமாக 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது அங்கு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் சந்திரசேகர்ராவ் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் தெலுங்கானா உருவாகி 2 தேர்தல் நடந்துள்ள நிலையில் அதில் சந்திரசேகர்ராவின் கட்சியை வெற்றி பெற்றுள்ளது. அவரே 2 முறையும் முதல்வராக உள்ளார்.
இப்போது நடந்தது தெலுங்கானாவின் 3வது சட்டசபை தேர்தல். இதில் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க முயற்சித்த சந்திரசேகர் ராவுக்கு தற்போது ஷாக் கிடைத்துள்ளது. அதாவது காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 69 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
அதாவது இந்த நிலவரப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கலாம். ஆனால் இன்னும் ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ரிசல்ட்டுகள் மாற்றம் ஏற்படலாம். ஒருவேளை அப்படி மாற்றம் நிகழும்போது மெஜாரிட்டிக்கு தேவையான 60 இடங்களை விட காங்கிரஸ் குறைவாக பெற்றால் அங்கு கூட்டணி ஆட்சி அமையலாம். அதோடு யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை உருவாகும்.
இந்த சூழல் உருவானால் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கு பாஜக மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இணையலாம் என கூறப்படுகிறது. இந்த 3 கட்சிகளுக்கும் மெஜாரிட்டிக்கான எம்எல்ஏக்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் கைகோர்ப்பார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. .அதாவது காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க பகையை மறந்து 3 கட்சிகளும் கூட்டணியாக ஒன்றிணையலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் பாஜக, பிஆர்எஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை பகையாளியாக பார்த்து வருகிறது.
அதோடு காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை தொடர்ந்த பாஜகவின் ‛பி' டீம் என விமர்சனம் செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தெலுங்கானாவில் காங்கிரஸை அரியணை ஏற விடாமல் தடுக்க இப்படி 3 கட்சிகளும் ஒன்றிணைவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications