ஆட்டு கொட்டகை டூ ஐ.ஐ.டி.. பழங்குடி மாணவியின் கனவை நிறைவேற்றிய தெலங்கானா அரசு.. சபாஷ் ரேவந்த் ரெட்டி!
ஹைதராபாத்: ஐ.ஐ.டி பாட்னாவில் படிப்பதற்கான இடம் கிடைத்தும் வறுமை சூழல் காரணமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி மாணவி பதாவத் மதுலதாவை மீட்டு அவரின் கல்விக் கனவை நிறைவேற்றியுள்ளார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராமலு, சரோஜி தம்பதி விவசாய கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் இளைய மகள் பதாவத் மதுலதா ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் 825 மதிப்பெண்ணுடன் டாப் ரேங்க் எடுத்தார். இதன் மூலம் பட்டியல் பழங்குடிக்கான ஒதுக்கீட்டில் ஐ.ஐ.டி பாட்னாவில் படிப்பதற்கான அட்மிஷனும் மதுலதாவை தேடிவந்தது. ஆனால், கூடவே ஜூலை 27ம்தேதிக்குள் கல்வி கட்டணம் ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என்கிற தகவலும் இடியாய் வந்திறங்கியது. அது அவர்கள் குடும்பம் கற்பனை செய்திராத தொகை.

இது சாத்தியம் இல்லை என்று சொல்லி மதுலதா தன் பெற்றோருக்கு உதவி செய்ய ஆடு மேய்க்க சென்றுவிட்டார். இந்தத் தகவல் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சென்றது. அவர் உடனடியாக மதுலதாவுக்கு உதவி செய்ய தெலங்கானா பழங்குடி நலமேம்பாட்டு துறைக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் மாணவிக்கு ரூ.1.51 லட்சம் ஸ்காலர்ஷிப் வழங்கி உதவி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுலதா தன் பெற்றோருடன் சென்று தெலங்கானா அதிகாரிகளிடம் ஸ்காலர்ஷிப் தொகையை பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து, மாணவி பதாவத் மதுலதா கூறுகையில், "ஐ.ஐ.டி பாட்னாவில் அட்மிஷன் கிடைத்தது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால் எனது சீனியர்களிடம் பேசிய பிறகுதான் ஐஐடி பாட்னாவில் படிப்பதற்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற தகவல் தெரியவந்தது. இவ்வளவு பெரிய கட்டணத்தை கட்ட முடியாது என்பதால் எனது கனவை நான் கைவிட்டுவிட்டேன். எங்கள் நிலையை அறிந்து உதவி செய்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.

மதுலதாவின் பெற்றோரும் தெலங்கானா அரசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர். மதுலதாவுக்கு தெலங்கானா அரசு 1.5 லட்சம் ரூபாய் காசோலை கொடுத்துள்ளது. மேலும், மடிக்கணினி வாங்குவதற்காக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பி.டெக் படிப்பதற்கான மூன்று ஆண்டுகால கல்விச் செலவை ஏற்பதாக மாவட்ட அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதுள்ளனர். இதுதவிர பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் தொகை வரப்பெற்றுள்ளதாகவும் மதுலதா தெரிவித்துள்ளார். மதுலதா பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கல்வி கட்டணத்தில் ரூ.1 லட்சம் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications