தெலுங்கானா: கேசிஆர் அரசுக்கு இடி- இளம்பெண் தற்கொலை- மாணவர்கள் விடிய விடிய போராட்டம்- #ByeByeKCR!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் குரூப் 2 அரசு தேர்வுகள் திடீரென ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வுக்கு தயாராகி வந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண்ணின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஹைதராபாத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இத்தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி இருக்கிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்ற முனைகிறது. பாஜகவோ, தொங்கு சட்டசபை வந்தால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளலாம் என காத்திருக்கிறது.

 Telangana: Protests erupt on young woman suicide for Group-II exam postponement

குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு: முன்னதாக தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6,7 ஆகிய தேதிகள் நடத்தப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு ஒத்திவைத்தது. தெலுங்கானா அரசு ஊழியர்கள், சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாக் இந்த குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மாணவி தற்கொலை: இதனிடையே குரூப் 2 தேர்வுக்காக ஹைதராபாத் அசோக்நகர் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குரூப் 2 தேர்வை தெலுங்கானா பிஆர்எஸ் அரசு ஒத்திவைத்ததால் விரக்தி அடைந்து அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

விடிய விடிய போராட்டம்: இதனைத் தொடர்ந்து அசோக்நகரில் இளம்பெண் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்த விடுதி அருகே ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர். நள்ளிரவில் செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட்டும் போராட்டம் நடத்தினர். சமூக வலைதளங்களில் #ByeByeKCR என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காக்கப்பட்டுள்ளது.

பிஆர்எஸ் அரசுக்கு நெருக்கடி: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் இளம்பெண் தற்கொலை ஆளும் பிஆர்எஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸும் கையில் எடுத்து பிஆர்எஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+