தெலுங்கானா: கேசிஆர் அரசுக்கு இடி- இளம்பெண் தற்கொலை- மாணவர்கள் விடிய விடிய போராட்டம்- #ByeByeKCR!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் குரூப் 2 அரசு தேர்வுகள் திடீரென ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வுக்கு தயாராகி வந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண்ணின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஹைதராபாத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இத்தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி இருக்கிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்ற முனைகிறது. பாஜகவோ, தொங்கு சட்டசபை வந்தால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளலாம் என காத்திருக்கிறது.

குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு: முன்னதாக தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6,7 ஆகிய தேதிகள் நடத்தப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு ஒத்திவைத்தது. தெலுங்கானா அரசு ஊழியர்கள், சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதாக் இந்த குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மாணவி தற்கொலை: இதனிடையே குரூப் 2 தேர்வுக்காக ஹைதராபாத் அசோக்நகர் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குரூப் 2 தேர்வை தெலுங்கானா பிஆர்எஸ் அரசு ஒத்திவைத்ததால் விரக்தி அடைந்து அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
BIG SHOCKING News
— Ashish Singh (@AshishSinghKiJi) October 13, 2023
Female student commits suicide in Brindavan Hostel in Ashok Nagar.
Students protesting on the road saying 'we want justice'#ByeByeKCR pic.twitter.com/nrV2TX6yQX
விடிய விடிய போராட்டம்: இதனைத் தொடர்ந்து அசோக்நகரில் இளம்பெண் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்த விடுதி அருகே ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர். நள்ளிரவில் செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட்டும் போராட்டம் நடத்தினர். சமூக வலைதளங்களில் #ByeByeKCR என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காக்கப்பட்டுள்ளது.
பிஆர்எஸ் அரசுக்கு நெருக்கடி: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் இளம்பெண் தற்கொலை ஆளும் பிஆர்எஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸும் கையில் எடுத்து பிஆர்எஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications