சட்டென சரிந்த சுரங்கம்.. உள்ளே சிக்கிய 8 பேர்.. நெருங்கும் தெலுங்கானா ஸ்பெஷல் டீம்! என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 8 பேர் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே அவர்களை மீட்க 3 ஸ்பெஷல் டீம் சுரங்கத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத் என்ற பகுதியில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டம் நடந்து வந்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சுரங்க பணிகள் நடந்து வந்தது.

Telangana accident

இதற்கிடையே எதிர்பாராத விதமாக பணிகள் நடந்துகொண்டிருந்த போது அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது.. சுரங்கத்தின் 14வது கிலோமீட்டரில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணியின்போது நீர் கசிவு ஏற்பட்டதாகவும் இதனால் அங்கிருந்த சிமெண்ட் விழுந்ததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் 8 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை உயிருடன் மீட்கத் தெலுங்கானா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்ளே சிக்கிய அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே அவர்களை மீட்க 3 ஸ்பெஷல் டீம் சுரங்கத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் சுரங்கத்தின் வலிமையை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்பது எப்படி என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+