திருப்பதி கோயிலில் ரீல்ஸ்க்காக சேட்டை! டிடிஎஃப் வாசன் மீது பாயும் ஆக்சன்! தேவஸ்தானம் எடுத்த முடிவு
திருப்பதி: பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பிராங்க் என்ற பெயரில் பொது இடங்களில் யூடியூபர்கள் செய்யும் செயல்கள் சில சமயங்களில் பொதுமக்கள் இடையே சலிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடும். வியூவ்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஜாலியாக வீடியோ எடுத்தாலும், அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.

பிராங்க் வீடியோ: அப்படித்தான், யூடியூபர் டிடிஎஃப் வாசன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு செல்லும் வழியில் உள்ள கேட்டை மூடுவது போல் பிராங்க் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய பக்தர்கள் வேகமாக உள்ளே செல்கின்றனர். பின்னர் அவர்களிடம் இது பிராங்க் தான் என்று சொல்கின்றனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை: திருப்பதி கோயிலில் சாமி தரிசனத்திற்கு மணிக்கணக்கில் நேரம் எடுக்கும். கால் வலிக்க நின்று, வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் நேரம் கிடைக்கும் போது சற்று அமர்ந்திருப்பார்கள். இப்படி இருக்கையில் அவர்களை ஏமாற்றுவது தவறு என நெட்டிசன்கள் பலரும் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது திருப்பதி தேவஸ்தானமும் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
டிடிஎஃப் வாசன்: நண்பர்களுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற டிடிஎஃப் வாசன் பக்தர்கள் காத்திருந்த பகுதியின் கேட்டை திறந்து விடுவதை போல பிராங்க் செய்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் விபத்தில் சிக்கினார்.
7 பிரிவுகளில் வழக்கு: சாலையில் வீலிங் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் சில நாட்களில் ஜாமீன் பெற்ற அவர் மீண்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட தொடங்கினார்.
குறிப்பாக சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்ற வாசன், காரை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வாசன் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த மே 30ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கிலும் தற்போது வாசனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications