"ஒரு பெயில்தான் விழுந்தது".. தமிழில் பேசிய தினேஷ்! அஸ்வினும் இல்லையே.. யார் கிட்ட பேசினார் தெரியுமா?
ஹைதராபாத்: நேற்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் தினேஷ் கார்த்திக் திடீரென தமிழில் பேசினார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி நேற்று வெற்றிபெற்றது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி 20 ஓவரில் 186/7 ரன்கள் எடுத்தது.
கேமரூன் கிரீன் 21 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அக்சர் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்தார்.
இவர் 3 விக்கெட்டுகளை நேற்று எடுத்தார். இதன்பின் ஆடிய இந்திய அணியில் கோலி 63, சூர்ய குமார் யாதவ் 69 ரன்கள் எடுத்து அசத்தினர். இதனால் 19.5 ஓவரில் இந்திய அணி 187-4 ரன்கள் எடுத்து வென்றது.

தினேஷ் கார்த்திக்
நேற்று நடந்த இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் திடீரென தமிழில் பேசினார். பொதுவாக தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் களத்தில் பல மொழிகளில் பேச கூடியவர். தெலுங்கு பூர்வீகம் என்பதால் தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார். அவ்வப்போது சஞ்சு சாம்சனிடம் மலையாளத்திலும் பேசி இருக்கிறார். இந்தி, ஆங்கிலமும் சரளமாக பேச கூடியவர். இந்திய அணியில் தமிழர்கள் இருந்தால் தமிழில் பேசுவார்.

தமிழ்
வருண் சக்ரவர்த்தி, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் பலரிடம் தினேஷ் கார்த்திக் தமிழில்தான் பேசி இருக்கிறார். நேற்று நடந்த போட்டியிலும் தினேஷ் கார்த்திக் திடீரென தமிழில் பேசினார். நேற்று அஸ்வின் மைதானத்தில் இல்லை. அதேபோல் கே. எல் ராகுலும் தினேஷ் கார்த்திக் அருகில் இல்லை. ஆனாலும் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசினார். நேற்று 8வது ஓவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சாஹல் வீசினார்.

யாரிடம் பேசினார்?
அப்போது மெக்ஸ்வெல் அக்சர் அடித்த த்ரோவில் ரன் அவுட் ஆனார். ஆனால் இதில் என்னவென்றால் தினேஷ் கார்த்திக் பந்து கைக்கு வரும் முன்பே ஒரு ஸ்டம்பை கையால் தட்டிவிட்டுவிட்டார். இதில் ஒரு பெயில் வந்துவிட்டது. இது போன்ற சமயங்களில் ரன் அவுட் செய்ய கிரிக்கெட் ரூல்ஸ் ஒன்று உள்ளது. ஒரு பெயில் ஏற்கனவே விழுந்துவிட்ட நேரங்களில் விக்கெட் எடுக்க வேண்டும் என்றால் இரண்டாவது பெயிலை பந்து நேரடியாக தாக்கி தூக்க வேண்டும்.

என்ன நடந்தது?
ஒருவேளை கீப்பர் தவறுதலாக இரண்டு பெயிலையும் நீக்கி இருந்தால்.. மொத்தமாக ஒரு ஸ்டம்பை பந்து நேரடியாக தூக்க வேண்டும். நேற்று தினேஷ் கார்த்திக் ஒரு பெயிலை தூக்கிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டாவது பெயில் நீங்காமல் இருந்தது. அதேபோல் அக்சர் அடித்த த்ரோவும் சரியாக இரண்டாவது பெயிலை தூக்கியது. இதனால் மேக்ஸ்வெல்லுக்கு விக்கெட் கொடுக்கப்பட்டது.

சொன்னது என்ன?
இந்த விக்கெட் கேட்கப்பட்ட போதுதான் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசினார். நேற்று போட்டியில் நடுவர்களாக ஜெயராமன் மதனகோபால், நிதின் மேனன் இருவரும் இருந்தனர். இரண்டு பேருக்கும் தமிழ் தெரியும். இவர்களிடம்தான் தினேஷ் கார்த்திக்.. பெயில் ஒன்று இருக்கிறது பாருங்கள். ஒன்று மட்டுமே விழுந்துள்ளது. இதை 3வது நடுவரிடம் சொல்லுங்கள் என்று கூறினார். நேற்று தமிழக வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் இவர் நடுவரிடம் தமிழில் பேசியது வைரலாகி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications