டெல்லி அருகே 10 பாக். தீவிரவாதிகள் பதுங்கல்! குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதியா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி அருகே 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை அவர்கள் சீர்குலைக்க திட்டமிடக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

நாட்டின் குடியரசு தினம், வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

10 terrorists suspected to be hiding in Ghaziabad

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள், நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

10 தீவிரவாதிகளும் உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத்துக்கு முதலில் சென்றதாகவும், அங்கு ஏராளமான வெடிபொருட்களை வாங்கி விட்டு, காசியாபாத் நகருக்குள் ஊடுருவி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காசியாபாத் நகரம், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்ததாக இருந்தபோதிலும், டெல்லிக்கு அருகே உள்ளது. இதையடுத்து தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+