பரிகார பூஜை.. 10 வயது சிறுமி பலமுறை பலாத்காரம்.. 69 வயது போலி சாமியார் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பரிகார பூஜை என்ற பெயரில் 10 வயது சிறுமியை ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதியில் வசித்து வருபவர் டோங்கி பாபா(69). இவர் தன்னை தானே சாமியார் என்று கூறிகொண்டு பூஜைகள் செய்வதாக கூறி ஏதோ செய்துள்ளார். இவரிடம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் வேண்டுதலை தெரிவித்து வந்தனர். இதற்கு சில பரிகாரங்களை சாமியார் கூறிவந்துள்ளார்.

 10 year old girl raped by Saint in delhi

அதில் சிலர் அவர் சொன்னவாரே நடந்துள்ளனர். இதையடுத்து அவருக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியது. இதனால் குஷியடைந்த சாமியார் தனது சித்து விளையாட்டுகளை ஆரம்பித்துள்ளார். இதனிடையே பெண் ஒருவர் தனது 10 வயது பெண் குழந்தையுடன் அடிக்கடி வந்து சாமியாரிடம் அருள்வாக்கு பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையில், அந்த 10 வயது பெண் குழந்தையை கட்டாயப்படுத்தி பலமுறை இவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

யாரிடமாவது இந்த விஷயத்தை சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்றும் சாமியார் மிரட்டியுள்ளார். இதுபற்றி அந்த குழந்தை அவரின் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த சாமியாரிடம் விசாரணை செய்தனர். இதில் அவர் போலி சாமியார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+