2020-க்குள் சிறு நகரங்களுக்கும் விமானச் சேவை: பிரதமர் மன்மோகன்சிங் உறுதி
ஆஜ்மீர்: மேலும் 30 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நேற்று முந்தினம் ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீர் அருகேயுள்ள கிஷான்கர் நகரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்....

மத்திய அரசு திட்டம்....
"இந்தியாவில் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் உள்ளன. இந்த நிலையை மாற்றி சிறிய நகரங்களையும் விமானச் சேவை மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

100 சிறிய நகரங்களில் விமானநிலையங்கள்....
இதன்படி, வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களில் விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்

முதல்கட்டமாக கிஷான்கர் நகரில்....
முதல்கட்டமாக முஸ்லிம்களின் புனித தலமான ஆஜ்மீர் அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிஷான்கர் நகரில் விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் 2016-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும்.

மேலும், 30 கோடி மக்கள்....
கடந்த ஓராண்டில் 16 கோடி இந்தியர்கள் விமானச் சேவையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைப்பதன் மூலம் 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 கோடியாக அதிகரிக்கும்' எனப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

தரம் உயர்த்த நடவடிக்கை....
விழாவில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் பேசும்போது, ‘சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, அவற்றை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications