"சுய இன்பம்".. பிரபலம் செய்த காரியம்.. அதுவும் ரோட்டிலேயே 100+ பெண்களாம்.. அட இவரா.. அதிர்ந்த மக்கள்
பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த குஜராத்தின் பிரபல மல்யுத்த வீரர் கைதானார்
காந்திநகர்: பிரபலமான நபர் ஒருவர், கேவலமான காரியத்தில் ஈடுபட்டு, கைதாகி ஜெயிலுக்கு போயுள்ளார்.. கைதானவரை பார்த்து, பொதுமக்கள் "இவரா?" என அதிர்ந்து போய் கேட்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த தினேஷ்குமார் என்ற இளைஞருக்கு 20 வயதாகிறது.. எழும்பூரில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலைசெய்து கொண்டே, ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி பெற்று வருகிறார்.
தினமும் வேலை முடிந்துவிட்டால், இளம் பெண்களை சீண்டுவதுதான் தினேஷின் ஹாபி.. அந்தவகையில், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதுடன் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருவார்..
காதல்,தற்கொலை முயற்சி டான்சர் அல்போன்ஸாவுக்கும் ராபர்ட்க்கும் இப்படி ஒரு உறவா?ஜெயிலுக்கு செல்லகாரணம்
அலாரம்
இதற்காகவே தினமும் காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொள்வாராம்.. வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரை பைக்கில் செல்வாராம். எதிரே எந்த பெண் வந்தாலும், அவர்களை சீண்டி, சேட்டையும் செய்து வந்துள்ளார்.. தனியாக பெண் வந்தால், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த பெண்ணின் அருகில் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு, பிறகு வேகமாக ஓடிவந்து பைக் எடுத்து கொண்டு பறந்து விடுவார்.. இப்படித்தான் ஒரு பெண்ணை சீண்டி உள்ளார்.. ஆனால் அவர் ஒரு ராணுவ வீரரின் மகள் ஆவார்..
சில்மிஷ சீண்டல்
தினேஷ்குமார் அந்த பெண்ணை சில்மிஷம் செய்ததை, பின்னாடியே நடந்து வந்த, அந்த ராணுவ வீரரும் பார்த்துவிட்டார்.. அப்பறமென்ன?? போலீசுக்கு விஷயம் பறந்ததும், தினேஷ்குமாரை தட்டி தூக்கி கொண்டு சென்றனர்.. தினேஷ் அப்போது போலீசில் ஒரு வாக்குமூலம் தந்தார்.. அதில், "எனக்கு சின்ன வயதில் இருந்தே இப்படி ஒரு ஆசை உண்டு.. எந்த பெண் தனியாக நடந்து சென்றாலும், சீண்டி பார்த்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.. இதற்காக எதையும் செய்வேன்.. இதுபோல், இதுவரை 150-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளேன்" என்று கூறியிருந்தார்.
மாஸ்க் மனிதர்
இதோ இன்னொரு வித்தியாசமான சபலிஸ்ட் ஒருவர் சிக்கி உள்ளார்.. குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. யோகா டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.. சமீபத்தில் மாளவியா நகர் போலீசில் இவர் ஒரு புகாரை தந்திருந்தார்.. அதில் "சாலையில் நடந்து சென்றபோது, முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை.. அடிக்கடி அந்த உருவத்தை தான் பார்ப்பதாகவும், இதுபோன்ற சில்மிஷ சேட்டைகளில் அவர் ஈடுபட்டு வருவதால், கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்
இதையடுத்து, போலீசாரும், அந்த புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்... அவர்களாலும் அந்த முகமூடி நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.. எனவே, அவரை கண்டுபிடிப்பதற்காகவே, 4 படைகளை அமைத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்... மேலும், அந்த பகுதிகளில் பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. அருகிலுள்ள வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்பு வீடுகள் மற்றும் பிற பொது இடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, முகமூடி அணிந்தவாறு சந்தேகப்படும் வகையில், நபர் ஒருவர் சென்றது அதில் பதிவாகி இருந்தது.. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் யார் என்ற அடையாளம் தெரிந்தது.
பிரபல நபர்
அவர் ஒரு பிரபல மல்யுத்த வீரர்.. அவர் பெயர் கவுஷல் பிபாலியா.. 24 வயதாகிறது.. அவர் 2016, 2017, 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்றுள்ள 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றவர்.. மீடியாவில் பலமுறை புகழப்பட்டவர்.. மல்யுத்தம் கற்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும், ரோல் மாடலாகவும் திகழ்பவர்.. இந்த அளவுக்கு ஒரு பிரபலமான நபரா, இப்படி ஒரு கீழ்த்தரமான வேலையை பார்த்தது? என்று போலீசாரே அதிர்ந்து போய்விட்டனர்.
சுயஇன்பம்
இறுதியில் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்... அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், போலீசார் அதற்கு மேல் அதிர்ச்சியானார்கள்.. காரணம், பாலியல் சீண்டல் இல்லாமல் இந்த நபரால் இருக்கவே முடியாதாம்.. இதற்காகவே, முகமூடி அணிந்து கொண்டு, பைக்கில் கிளம்பி விடுவாராம்.. தன்னுடைய கீழ்த்தரமான செயலால் வக்கிரமான இன்பம் அடைந்து வந்துள்ளார்.. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் அவமானத்தால் யாரும் புகார் அளிக்க முன்வராமல் இருந்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையையடுத்து போலீசார் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
யோகா மாஸ்டர்
"பிபாலியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.. தன் ஆடைகளை கழற்றி, பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை தந்து இன்பம் அடைந்துள்ளார்.. குறிப்பாக சாலையில் செல்லும் பெண்களின் பின்பக்கத்தை தாக்கிவிட்டு தப்பிவிடுவார்.. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் கருதி புகார் எதுவும் தரவில்லை.. எனினும், 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக உண்மையை அவர் ஒப்புகொண்டுள்ளார்" என்றனர்... கைதாகி சிறையில் உள்ள யோகா மாஸ்டருக்கு, போலீசார் "கோச்சிங்" நடத்தி கொண்டிருக்கிறார்கள்..!!
லிப்ஃட்
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் யாருமே முன்வந்து புகார் தராத நிலையில், ஒரே ஒரு பெண் மட்டும் போலீசில் புகாரை தந்தார்.. அதைவைத்துதான், போலீசாரும் இந்த விசாரணையை துவக்கினார்கள்.. புகார் தந்த பெண் யார், ராஜ்கோட்டில் யோகா ஆசிரியராக வேலை பார்க்கிறாராம்.. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இவர் லிஃப்டில் சென்று கொண்டிருந்தபோது, அந்த லிப்ட்டுக்குள் இந்த வீரர் நுழைந்திருக்கிறார்.. தன்னுடைய புகாரில், "நான் லிப்ட்டில் ஏறும்போது, ஒருவர் வந்து ஏறினார்.. அப்போது அவர் முகமூடி அணிந்திருந்தார்.. லிப்ட்டில் வேறு யாருமில்லாததால், என்னை தகாத முறையில் பார்த்தார்.. பிறகு அவரது ஆடைகளை களைந்து என்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றார். இதனால் நான் கத்தி கூச்சலிடவும், அங்கிருந்து அவர் தப்பி சென்று விட்டார்" என்று புகார் மனுவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோச்சிங்
கைதான பிபாலியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.. தன் ஆடைகளை கழற்றி, பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை தந்து இன்பம் அடைந்துள்ளார்.. குறிப்பாக சாலையில் செல்லும் பெண்களின் பின்பக்கத்தை தாக்கிவிட்டு தப்பிவிடுவார்.. இதனால் பொதுவெளியில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் கருதி புகார் எதுவும் தரவில்லை.. எனினும், 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக உண்மையை அவர் ஒப்புகொண்டுள்ளார்" என்றனர்... இதையடுத்து, கைதாகி சிறையில் உள்ள மல்யுத்த வீரருக்கு, போலீசார் "கோச்சிங்" நடத்தி கொண்டிருக்கிறார்கள்..!!