10 ஆடுகளை விற்று வீட்டில் கழிப்பறை கட்டிய 105 வயது மூதாட்டிக்கு விருது !
டெல்லி: தனது 10 ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய 105 வயது மூதாட்டிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி விருதினை வழங்க உள்ளார்.
நாட்டின் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் முறையான சுகாதார வசதி, சுத்தமான கழிப்பறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு தொடங்கப் பட்ட திட்டமே "ஸ்வாச் பாரத் அபியான்' எனும் தூய்மை இந்தியா திட்டமாகும். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் கிராமங்கள் தோறும் கழிப்பறை கட்ட மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள கோட்டோபாரி கிராமத்தைச் சேர்ந்த குன்வர் பாய் (105) என்ற மூதாட்டி கழிவறை கட்டுவதற்காக தான் வைத்திருந்த 10 ஆடுகளை விற்றுள்ளார்.
இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில், கிராம நகரம் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் மோடி தொடங்கி வைத்தார். நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த ராஜன்காவ்ன் மாவட்டம் குர்பட் கிராமத்தில், 'ரூர்பன்' என்ற அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, குன்வர் பாய் கழிப்பறை கட்டிய தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்த மூதாட்டியின் காலை தொட்டு வணங்கினார்.
இந்நிலையில், தனது 105 வயதில் கழிப்பறை கட்டி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த அவரின் இந்த செயலை பாராட்டும் விதமாக அவருக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 17 ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி விருதினை வழங்க உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications