4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்! ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்
மும்பை: இந்திய அணுசக்தித் துறையில் பணிபுரிந்த விஞ்ஞானிகளில் 2009-13 காலகட்டத்தில் 11 பேர் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.
மரணமடைந்த 11 பேரில், விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் சேர்த்து மொத்தம் 8 பேர் வெடி விபத்துகள் மூலமாகவும், தூக்கில் தொங்கியும், நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள மூன்று பேரில், இருவர் தற்கொலை செய்து கொண்டும், ஒருவர் சாலை விபத்திலும், மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் கடந்த செப்டம்பர் 21ம் தேதி இதுதொடர்பான தகவல்களை கேட்டிருந்தார். இதன் மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.
விஞ்ஞானிகள் தற்கொலை
2010 ஆம் ஆண்டு, ட்ராம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இரு சி-பிரிவு விஞ்ஞானிகளின் உடல்கள் அவர்களுடைய வீடுகளில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2012 ஆண்டு, ராவத்பாட்டாவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த சி-பிரிவு விஞ்ஞானியின் உடலும் அவருடைய இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது.
தற்கொலைக்கு காரணம்
இந்த 3 பேரில், ஒருவர், நெடுங்காலமாக உடல்நலக் குறைபாட்டினால் அவதிப்பட்டு, இறுதியாக தற்கொலை செய்துகொண்டதாக கூறி போலீசார் வழக்கை மூடியுள்ளனர். மற்ற இருவரின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்து
2010 ஆம் ஆண்டு, ட்ராம்பேவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்கூடத்தில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இறந்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம்
எஃப் கிரேடு விஞ்ஞானி ஒருவர், தனது மும்பை இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்று வரை கொலையாளி யார் என கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேபோல், இந்தூரில் உள்ள ராஜா ராமன்னா மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த டி கிரேடு விஞ்ஞானியும் தற்கொலை செய்துகொள்ள, போலீசாரும் அந்த வழக்கை மூடியுள்ளனர்.
கல்பாக்கம் விஞ்ஞானி
கல்பாக்கத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானி 2013 ஆம் ஆண்டு கடலில் குதித்து உயிரிழந்துள்ளார். மும்பையை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், தற்கொலை செய்துகொண்டதற்கும், கர்நாடகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் காளி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications