பீகார்: நிதிஷ்குமாருக்கு மரண அடி? 12 ஜேடியூ எம்எல்ஏக்கள் எஸ்கேப்? 20 பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி?
பாட்னா: பாஜகவுடன் இணைந்து மீண்டும் புதிய ஆட்சி அமைக்கலாம்; தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓடலாம் என கணக்குப் போட்டிருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அவரது ஜேடியூவின் 12 எம்.எல்.ஏக்களும் பாஜகவின் 20 எம்.எல்.ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.
பீகாரில் 2020-ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் நிதிஷ்குமார். 2022-ம் ஆண்டு பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு லாலுவின் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் மற்றொரு புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார் நிதிஷ்குமார்.

தற்போது லாலுவின் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணியை உதறிவிட்டு மீண்டும் பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வராக திட்டமிட்டுள்ளாராம் நிதிஷ்குமார். இதற்காக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்ட நிதிஷ், இன்று தமது பதவியை ராஜினாமா செய்வார்; நாளை பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைப்பார் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால் நிதிஷ்குமாருக்கு மரண அடி தரும் வகையில் அவரது சொந்த கட்சியான ஜேடியூ எம்.எல்.ஏக்கள் 12 பேர், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். இந்த 12 எம்.எல்.ஏக்களை நிதிஷ்குமார் தரப்பு தொடர்பு கொள்ள முடியாமல் தத்தளித்து வருகிறதாம். இந்த 12 பேரும் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தால் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் பெரும்பான்மை பலத்துடன் முதல்வராகிவிட முடியும் என்பது ஒரு கணக்கு.
இன்னொரு பக்கம், நிதிஷ்குமாரை மீண்டும் கூட்டணியில் சேர்க்கவே கூடாது என பாஜகவிலேயே 20 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனராம். இந்த 20 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ்- ஆர்ஜேடியுடன் கை கோர்க்கவும் தயாராக இருக்கின்றனராம். நிதிஷ்குமாரின் கண்ணா மூச்சி விளையாட்டு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது டெல்லி பாஜக மேலிடத்தை அதிர வைத்திருக்கிறதாம். இதனையடுத்து டெல்லியிலும் பாட்னாவிலும் அவசர ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. பீகார் அரசியலில் நிமிடத்து நிமிடம் பரபரப்பு அதிகரித்து கொண்டே இருப்பது தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications