இமாச்சல் பிரதேசம்: தனியார் பஸ் ஏரியில் கவிழ்ந்து 12 பேர் பலி - 20 பேர் காயம்
பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசத்தில் தனியார் பேருந்து எரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்லது கோபிந்த் சாகர் என்ற ஏரி. ரிஷிகேஷில் இருந்து பிலாஸ்பூருக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி வந்துள்ளது. இந்தப் பேருந்து கோபிந்த் சாகர் ஏரி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகளும் நீரில் மூழ்கி பலியானார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், காயங்களுடன் 20 பயணிகளை மீட்டனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.












Click it and Unblock the Notifications