12 வயது சிறுமி.. 2 மாதமாக சீரழித்த வாத்தியார்.. கர்ப்பமானதால் வண்டவாளம் அம்பலம்!
12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார்
மலப்புரம்: வயிறு வலிக்காக 12 வயது மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு, அப்படி ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மகள் கர்ப்பமாக இருக்கிறார் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 12 வயது சிறுமி அவள்.. 7-ம் வகுப்பு படிக்கிறாள்.
சிறுமியின் பள்ளி வாத்தியார்தான் இவ்வளவு பெரிய வேலையை செய்துள்ளார். அடிக்கடி வயிறு வலி என்று மகள் சொல்லவும், எதேச்சையாகத்தான் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் கர்ப்பமாக உள்ளதை தெரிவித்தனர். இதனால் அதிர்ந்த பெற்றோர், சிறுமியை பெற்றோர், மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்கிற்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது டாக்டர்கள் சிறுமியிடம் விசாரித்தபோதுதான், வகுப்பு ஆசிரியரின் வண்டவாளம் தெரிந்தது, கிட்டத்தட்ட 2 மாதமாக சிறுமியை பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆசிரியர் ஆளாக்கி உள்ளார்.
இதையடுத்து, அதிர்ந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் தந்தனர். இந்த புகாரின்பேரில், ஆசிரியர் மீது பாலியல் பலாத்காரம், குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியரை காணவில்லை. தலைமறைவாகி விட்டார்.
எனினும், மலப்புரம் போலீசார் ஆசிரியரை தேடிவருகின்றனர்.