உ.பி.யில் கொடூரம்: கழிப்பறைக்கு சென்றபோது 5 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி தீக்குளிப்பு
மதுரா: உத்தர பிரதேச மாநிலத்தில் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோசி கலானைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை கழிப்பறைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 5 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து வெளியே தெரிந்தால் பெயர் கெட்டும்விடும் என்பதால் சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கையில் சிறுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பிடித்தவுடன் சிறுமி வலி தாங்க முடியாமல் அலறினார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு எழுந்த அவரது குடும்பத்தார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 70 சதவீதம் தீக்காயம் அடைந்த சிறுமி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications