நாகாலாந்தில் 15 வாக்குச் சாவடிகளில் 100%க்கு மேல் வாக்குப் பதிவு- விசாரணைக்கு உத்தரவு!
கோஹிமா: நாகாலாந்தில் 15 வாக்குச் சாவடிகளில் 100%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவானது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகாலாந்தின் ஒரு லோக்சபா தொகுதிக்கு கடந்த 9 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 2059 வாக்குச் சாவடிகளில் 15-ல் 100%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன.

சதேரி வாக்குச் சாவடியில் 117 வாக்காளர்கள் உள்ளனர் ஆனால் அங்கு 144 வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல் கையேதா என்ற வாக்குச் சாவடியில் மொத்தம் 155 வாக்காளர்கள்தான். ஆனால் பதிவான வாக்குகளோ 168. நிஹோஷே என்ற வாக்குச் சாவடியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 350. பதிவான வாக்குகள் எண்ணிக்கையோ 358.இதேபோல் அமஹடோர் என்ற வாக்குச் சாவடியில் மொத்தம் 780 வாக்காளர்கள் இருக்க 786 வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
மொத்தம் 15 வாக்குச் சாவடிகளில் 100%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மேலும் 33 வாக்குச் சாவடிகளில் 100% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய 15 வாக்குச் சாவடிகளில் 100%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவானது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications