பிஞ்சிலேயே பழுத்த 15 வயது சிறுவன்: 8 சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் கைது!
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து எட்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 15 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
விசாரணையில் இதே போல் மேலும் ஆறு சிறுமிகளும் பாதிக்கப்பட்டிருந்த விஷயம் வெளியாகியது. ஆனால், மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் இதுகுறித்த புகாரினை அளிக்க முன்வரவில்லை.
குற்றவாளியின் அடையாளங்கள்:
இதனையடுத்து, இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளிடம் குற்றவாளி குறித்து அளித்த அடையாளங்களை வைத்து காவல் துறையினர் ஒரு வரைபடத்தை தயார் செய்தனர்.
15 வயதான சிறுவன்:
பின்னர் சம்பவ இடங்களில் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாராவில் பதிவாகியிருந்த வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு 15 வயது சிறுவன் அழைத்து சென்றது தெரிந்தது.
பலாத்காரம் செய்த சிறுவன்:
மற்றொரு சிறுமியிடம் விசாரித்தபோது அவரும் இதே அடையாளங்களை கூறியுள்ளார்.
காவல்துறையினர் கைது:
இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அந்த 15 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர். அச்சிறுவன் தற்போது சிறுவர் சீர்த்திருத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பழக்கத்திற்கு சிகிச்சை:
கைது செய்யப்பட்ட சிறுவன் போதை பழக்கத்தில் இருந்து விலகுவதற்காக மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்துள்ளார்.
தீபாவளிக்கு வீடு திரும்பியவர்:
தீபாவளிக்கு வீடு திரும்பிய அச்சிறுவன் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.