வீட்டுக்கு சென்றால் அக்கம்பக்கத்தினர் தொல்லை தாங்கலை... போலீஸ் ஸ்டேஷனில் தூக்கிட்ட சிறுமி
வீட்டுக்கு சென்றால் அக்கம்பக்கத்தினர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள் என்ற சிறுமி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லி: டெல்லியை சேர்ந்த 17 வயது காவல் நிலையத்தில் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர்கள் வசிக்கும் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்கள் சிறுமியை தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டனர்.

அதற்கு சிறுமியின் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அந்த சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர்கள் கடத்தினர். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் பக்கத்துக வீட்டுக்காரர்களிடம் சண்டையிட்டுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அன்று விகார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த சிறுமி வந்துள்ளார். அங்கு காவலர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் அவரை காப்பகத்துக்கு அனுப்ப போலீஸார் திட்டமிட்டிருந்தனர். இதனிடையே இன்று காலை அந்த சிறுமி காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறைக்கு ஓடி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் கதவை உடைத்தனர். அப்போது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications