மேற்கு வங்க மாநில சாலை விபத்து 16 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கார் ஒன்று வேகமாக வந்த டிரக்குடன் மோதிய விபத்தில் 1 குழந்தை உட்பட 16 பேர் பலியாயினர்.
மால்டாவில் இன்று காலை 7.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த டிரக் எதிரே வந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர். விபத்தில் பலியானவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
விபத்தை அடுத்து தேசிய நெடுஞ்சாலை சிறிது நேரம் மூடப்பட்டது. தீயணைப்புப் படை வீரர்களும், காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications