உலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்!
7 வயது சிறுமிக்கு 7 வயது சிறுவன் பாலியல் தொல்லை தந்துள்ளான்
சண்டிகர்: உலகத்துல எங்காவது இப்படி நடக்குமான்னு தெரியல.. 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளான் ஒருவன்.. அந்த ஒருவன் யார் என்றால், மாணவியுடன் ஒரே கிளாஸில் படிக்கும் 1-ம் வகுப்பு மாணவன்தான்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 1-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் பெயர் சிர்சா. ஒருநாள் சிர்சாவை, சக மாணவன் மதிய உணவு இடைவேளையின்போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறான்.

அன்று சாயங்காலம், குழந்தை வீட்டுக்கு திரும்பியதும் வயிறு வலி என்று அம்மாவிடம் அழுது இருக்கிறாள். இதனால் பயந்துபோன பெற்றோர், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அப்போதுதான் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் அறிந்து பெற்றோரிடம் சொன்னார்கள்.
அதிர்ந்து போன பெற்றோர், ஸ்கூலில் என்ன நடந்தது என்று மாணவியிடம் கேட்டதற்கு, லன்ச் பிரேக்கில் ஒரு பையன் தவறாக நடந்து கொண்டான் என்று அழுதவாறே சொன்னாள். இதையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் தந்தனர்.
சம்பந்தப்பட்ட சிறுவன் யார் என்று கேட்டால் சிறுமிக்கு பெயர் தெரியவில்லை, ஆனால் நேரில் பார்த்தால் முகத்தை அடையாளம் காட்டுவேன் என்று போலீசில் தெரிவித்தாள். இதையடுத்து, சிறுவன் மீது வழக்கு போடப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. 7 வயது சிறுமியை சீரழித்த 7 வயது சிறுவனின் செயலால் ஹரியானா அதிர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications