அலாவுதீனின் அற்புத விளக்கு.. தேய்த்தால் பூதம் வரும்.. கண்கட்டி வித்தையால் ரூ31 லட்சம் ஏமாந்த டாக்டர்
மீரட்: அலாவுதீனின் அற்புத விளக்கு என கூறி தங்க முலாம் பூசிய விளக்கை ரூ 1.5 கோடிக்கு விலை பேசிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு மருத்துவர் புகார் அளித்துள்ளார். இதை கேட்ட போலீஸார் சிரிப்பதா அழுவதா என தெரியாமல் விழித்தனர். அதாவது அலாவுதீனின் அற்புத விளக்கு என கூறி தங்க முகாம் பூசிய விளக்கு ஒன்றை ரூ 1.5 கோடிக்கு விலை பேசி கும்பல் ஒன்று புகார் அளித்த மருத்துவரிடம் விற்பனை செய்துள்ளது.
அந்த புகாரில் இக்ராமுதீன், அனீஸ் என்ற இருவர் உடல்நலம் இல்லாத தங்களது தாய்க்கு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவரை அணுகியுள்ளனர். இதன்பின்னர் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்களின் வீட்டுக்கு சென்று மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.

மருத்துவர்களிடம் அறிமுகம்
இந்த நிலையில் பாபா என்பவரை இருவரும் மருத்துவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அப்போது எங்களிடம் ரூ 1.5 கோடியில் அலாவுதீன் விளக்கு ஒன்று உள்ளது. அது செல்வவளம், உடல்நலம் மற்றும் நல்ல எதிர்காலம் ஆகியவற்றை வழங்கும்.

தவணை
உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.. என கிளப்பி விட்டுள்ளனர். இதன்பின்னர் அலாவுதீன் போல் உடையணிந்த ஒருவர் மருத்துவர் முன்பு தோன்றியுள்ளார். இவற்றை நம்பிய மருத்துவர் , அந்த விளக்கை வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். அதற்காக முதல் தவணையாக ரூ 31 லட்சத்தை கொடுத்தார்.

போலீஸில் புகார்
பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் அந்த விளக்கை தேய்த்துள்ளார். அப்போது வெறும் தூசியே வந்தது. மீண்டும் மீண்டும் தேய்த்ததில் பூதத்திற்கு பதிலாக தூசியே வந்தது. இதனால் நாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் போலீஸில் புகார் செய்தார்.

பூசிய விளக்கு
இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர். தங்க முலாம் பூசிய விளக்கை பறிமுதல் செய்துள்ளனர். தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகிறார்கள். இந்த இருவரும் நகரின் பல பகுதிகளுக்கு சென்று வீட்டில் இருப்பவர்களிடம் தந்திர வித்தைகள் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications