For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதியில் 2 கிலோ ‘தலை முடி’ திருட்டு!

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 2 கிலோ தலைமுடி திருட்டு போயுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். தினமும் சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தலைமுடியை காணிக்கையாக அளித்து வருகின்றனர்.

இவ்வாறு காணிக்கையாகப் பெறப்படும் முடியானது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைக்கிறது.

2 Kg hair stolen in Tirupati

இந்நிலையில், நேற்று திருமலையில் உள்ள சப்தகிரி முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் 2 கிலோ தலைமுடி திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகளுக்கும், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், சம்பந்தப்பட்ட தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In Tirupati, Tirumala Tirupati Devasthanams officials are searching for the persons, who stole 2Kg of hair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X