“ஷாக்”.. 2 விமானிகளும் மரணம்.. அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பறிபோன வீரர்களின் உயிர்கள்
இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் படைத் தளபதிகளின் பயணங்கள், தீவிர ரோந்து பணிகள், மீட்புப் பணிகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மலை பிரதேசங்களில் நேர விரையத்தை தவிர்க்க சாலை வழியாக செல்லாமல் ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் பயணம் செல்வது வழக்கமாக இருக்கிறது.

அருணாச்சல பிரதேசம்
ஆனால், அங்கு நிலவும் மோசமான வானிலைகளின் காரணமாக விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. குறிப்பாக அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அதிகளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் அங்கு சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராணுவ ஹெலிகாப்டர்
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டரில் இன்று காலை 9:15 மணியளவில் 2 ராணுவ விமானிகள் சென்று கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் திடீரென அவர்கள் தொடர்பை இழந்தனர். அந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

விபத்து
இந்த நிலையில் அந்த ராணுவ ஹெலிகாப்டர் 2 விமானிகளுடன் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்ற மீட்புப் படையினர், காலை முதல் பல மணி நேரங்களாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். இருப்பினும் விமானிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மலைகள் சூழ்ந்த பகுதி
திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் வழியில் உள்ள பொம்திலா என்ற மலைப்பகுதிகள் நிறைந்த இடத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் சென்ற 2 ராணுவ விமானிகளின் நிலை குறித்து தெரியாமலேயே இருந்தது. அவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இருவரும் உயிரிழப்பு
இந்த நிலையில் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஹெலிகாப்டரில் பயணித்த 2 ராணுவ விமானிகளும் கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்திய ராணுவ விமானிகள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications