கே.ஆர்.எஸ் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,000 கன அடியாக கிடுகிடு அதிகரிப்பு!
Recommended Video

மைசூர்: கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த அணைக்கு தற்போதைய நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாக உள்ளது. 124.8 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையில் தற்போது 123 அடி தண்ணீர் உள்ளது. எனவே இன்று இரவில் மேலும் 20 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வாய்ப்பு உள்ளது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
முன்னதாக, காவிரி நதியின் இரு புறங்களிலும் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெறுமாறு அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவது கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்புவதற்கு காரணமாகும். இதன் காரணமாக கர்நாடகம் தமிழகம் இடையே நிலவி வரும் காவிரி பிரச்சினைக்கு இந்த வருடம் பிரேக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications