லோக்சபா வாக்கெடுப்புக்கு பணம் கொடுத்த விவகாரம்: அமர்சிங், அத்வானி உதவியாளர் விடுவிப்பு
டெல்லி: லோக்சபா நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பி.க்களுக்குப் பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சமாஜ்வாடி கட்சி முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோர் உள்பட 6 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
2008ஆம் ஆண்டு லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிஸுக்கு ஆதரவாக வாக்களிக்க, எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்ததாக அப்போதைய சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் மீது பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
இதற்கு ஆதாரமாக ரூபாய் நோட்டுக்களை லோக்சபாவில் காண்பித்த பா.ஜ.க. எம்.பி.க்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது.
இதையடுத்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், அமர்சிங், சுதீந்திர குல்கர்னி, பா.ஜ.க. எம்.பிக்கள் அசோக் அர்கல் மற்றும் ஃபக்கன் சிங் குலாஸ்தே, முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மகாவீர் சிங் பகோரா மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த சோஹைல் ஹிந்துஸ்தானி ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி நரோத்தம் கௌஷல் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications