லோக்சபா தேர்தல்: ஆம் ஆத்மி- பாஜக இடையேதான் போட்டி.. காங். 'சீனிலேயே' இல்லை- கேஜ்ரிவால்
டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டி என்பது ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேதான்... இந்த களத்தில் காங்கிரஸ் இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதலில் 200 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளதாவது:
நாட்டில் இரண்டு வாய்ப்புகள்தான் இப்போது இருக்கின்றன. எதியூரப்பா போன்ற ஊழல் தலைவர்களை நாடு முழுவதும் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா. ஒன்று... மற்றொன்று நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் ஆம் ஆத்மி கட்சி.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியும் பாஜகவும்தான் போட்டியாளர்கள்.. காங்கிரஸ் கட்சி களத்திலேயே இல்லை.. அந்த கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications