உ.பி. மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் பலாத்கார சம்பவங்கள் ரொம்ப கம்மி.. சொல்வது முலாயம் சிங்
லக்னோ: உத்தரப்பிரதேச மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு பலாத்கார சம்பவங்கள் மிகக் குறைவுதான் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயசிங் தெரிவித்து புதிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவ செய்திகள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகின்றன. சிறுமிகள், இளம் வயது பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பெண்களும் இதனால் பாதிக்கப்படுவதாகவும், அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 21 கோடி பேர். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பலாத்காரச் சம்பவங்கள் குறைவாகத் தான் நடக்கின்றன என்றார்.
முலாயம்சிங் யாதவின் இந்த கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே 'பசங்கன்னா விளையாட்டுத்தனமான பலாத்காரம் செய்துவிடுகிறார்கள் என்று முலாயம் கூறி சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.